தாய் தந்தை பாசத்திற்காய் ஏங்கி அது கிடைக்காமல், தனியாய் தன் அடையாளங்களை மறைத்து, தான் விரும்பிய வாழ்வினை வாழும் நாயகன்..!! அன்பும் அறிவும் கொண்ட சேட்டைக்காரியான நாயகி..!! நாயகியின் சேட்டைகளும், அறிவாற்றலும் எவ்வாறு நாயகனை ஈர்க்கிறது,அவர்கள் இருவரும் இணைந்து எவ்வாறு நாயகனின் எதிரிகளை வீழ்த்தி, வாழ்வில் வெற்றி கொள்கிறார்கள் என்பதே காதலும், மோதலும் கூடிய நகைச்சுவை கலந்த இந்த நாவலின் சாராம்சம்.
இளமையில் வேகத்தில் பணத்தின் பின்னால் ஓடும் ஆர்.சியும் ஜாக்குலினும் முதுமையில் தன் மகன் ஜேசன் அன்பை நாடும் பொழுது இளமையில் தனக்கு கிடைக்காத அன்பை முதுமையில் அவர்களுக்கு கொடுக்க மறுக்கிறான் ... தாய் இறந்த பின்னர் உறவின் இழப்பை உணரும் ஜேசன் தன் நண்பன் அரவிந்தால் தந்தையுடன் இணைகிறான் ...
தன் தந்தையுடன் இணைந்து அவர் தொழிலை நடத்த திட்டமிட்டு இருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவனின் தந்தை விபத்துக்குளார் அதுவும் ஒரு கொலை முயற்ச்சி என்று அறியும் ஜேசன் எவ்வாறு அவன் தந்தையின் எதிரியை கண்டுபிடிக்கிறான் அதற்க்கு எவ்வாறு அவன் காதலி சஞ்சனா உதவுகிறாள் என்பதை கதையின் போக்கில் அறியலாம்....
ஜேசனாக மற்றும் ஜேசீயாக அவனின் ஆளுமை அவனின் காதல் ....சஞ்சனா மற்றும் நித்யாவின் லூட்டி அரவிந்தின் நட்பு .... என்று கதை எங்கும் தோய்வில்லாமல் நகர்கின்றது ....வாழ்த்துக்கள்💐💐