ஒருவர் என்னைப் பிடுங்கட்டும். ஒருவர் என்னை நடட்டும். ஒருவர் தன் கைவிரல்களில் உருவிக் கொள்ளட்டும். பிறிதொருவர் வந்து என் விரல்களைப் பற்றிக் கொள்ளட்டும். யாராவது எனக்கிருப்பார்கள் என்றும், யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி, எல்லோர்க்கும் அன்புடனே எழுதிக் கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறேன்.
Vannadaasan (தமிழ்: வண்ணதாசன்) aka கல்யாண்ஜி is a popular poet in Tamil Modern literature. He lives in Tirunelveli. He writes short stories and non fiction articles under the name "Vannadhasan". He writes poems under the name "Kalyanji". His real name is S. Kalayanasundaram
இதுவே நான் படிக்கும் முதல் வண்ணதாசன் எழுதிய புத்தகம் ஆகும். இந்த புத்தகத்தில் சில சிறந்த சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதுவுமில்லாமல் வண்ணதாசன் அவர்களின் எழுத்து என் மனதுக்கு மிகவும் நெருக்கமான தான் தோன்றுகிறது அதனாலேயே எனக்கு இந்த புத்தகம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. வண்ணதாசன் மனிதர்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பது அவரின் கதைகளின் மூலம் தெரிகிறது ஏனென்றால் பெரும்பாலும் கதைகளில் அவர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த பழகிய மனிதர்களைப் பற்றிய நினைவுகளை சுமந்துகொண்டு அல்லது தன்னோடு பழகிய மனிதர்களை சென்று சந்திக்கும்படி தான் நிகழ்வுகள் எல்லாம் கதைகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன அந்த நினைவுகள் எல்லாம் நமது மனதின் ஓரத்தில் இருக்கும் சில நினைவுகளை தட்டி எழுப்பி விடுகின்றன. படித்து முடித்தவுடன் வலிக்கும் படியான அடி எனும் சிறுகதை குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். காற்றின் அனுமதி நடுகை போன்ற நேசமே முதலாயதாய் கொண்ட கதைகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன