15 நாட்டார் கதைகள் அடங்கிய தொகுப்பு. நாட்டார் கதைகள் , சுவாரசியமானவை மட்டுமல்ல; அவை ஓர் இனத்தின் பண்பாட்டு வரலாற்றுக்கான சான்றுகள். இந்தக் கதைகளைத் தொகுத்து ஆராய்வதன் மூலம் இன்றைக்கு உள்ள பல சமூகச் சிக்கல்களுக்கான காரணத்தைக் கண்டறிய முடியும். அப்படிப்பட்ட ஆய்வுகளைத் தமிழில் மேற்கொண்டு வருபவர்களுள் முக்கியமானவர் பேராசிரியர் அ.கா.பெருமாள். நாட்டார் வழக்காற்று ஆய்வாளராக அடையாளம் பெற்றாலும்கூட கல்வெட்டியல், சிற்பவியல், கோயில் கலை ஆகிய துறைகள் சார்ந்தும் இவர் செயல்பட்டுவருகிறார்.
A.K. Perumal (September, 28 1947) is a Tamil folklore researcher and literary historian whose area of research includes Kanyakumari district's literary and archeological history. He has experience in field-based research. He plays an important role in collecting and publishing research works on oral history, inscriptions, sculptures, temple architecture, palm leaf manuscripts, folklore and folk artforms of Tamil Nadu.
இதில் இருக்கும் 15 கதைகளுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது அனைத்து கதைகளிலும் குழந்தையின்மை முதன்மையாக வருகிறது பிறகு அக்குழந்தை வரம் பெற்று பிறக்கிறது அக்குழந்தையின் மூலம் நிகழும் அறப்பிழைவு வழியாக அநீதி நிகழும் போதும். குற்றங்கள் மனசறிய குற்றங்களாக படும்போதும் இறந்தவர்களை இறை என வைக்கப்படுகிறார்கள் அவர்களுக்குக் கொடையும் பலியும் கோவிலும் கொடுத்து மக்கள் வழிபடுகிறார்கள். குலதெய்வங்கள் சிறுதெய்வங்கள் ஆகியவற்றின் தோற்றங்கள் குறித்தான சிறு அறிமுகத்தை இந்த நூல் நமக்கு அளிக்கும்.
அம்மானை வடிவிலான நாட்டார் கதைகளை பேச்சு வழக்கிற்கு மாற்றி எழுதப்பட்ட 15 கதைகள் கொண்ட தொகுப்பு இது... இதில் அந்த காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்கள் எப்படி வழிபடும் ஸ்தானத்திற்கு உயர்வு பெருகிறார்கள் என்பதை இந்த புத்தகம் உரைக்கின்றது...
நாட்டார் கதைகள் [நாட்டுப்புற கதைகள்] ~ அ. கா. பெருமாள்
அ. கா. பெருமாள், தமிழகத்தின் முதன்மையான நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்; வரலாற்றுப் பேரறிஞர் மற்றும் இலக்கிய ஆய்வறிஞர். களத்தில் சிதறிக்கிடக்கும் வழக்காறுகளைச் சேகரித்து, ஆராய்ந்து அவைகளை நாட்டார் வழக்காற்றியல் நூல்களாக எழுதுவது இவருடைய பணியாகும்.
அம்மானை வடிவத்தில் இருந்த சில கதைகளை எளிய உரைநடை வடிவத்தில் மாற்றியமைக்கப்பட்டவையே இக்கதைகள். நாட்டார் கதைகள், ஓர் இனத்தின் பண்பாட்டு வரலாற்றுக்கான சான்றுகள். இந்தக் கதைகளைத் தொகுத்து ஆராய்வதன் மூலம் இன்றைக்கு உள்ள பல சமூகச் சிக்கல்களுக்கான காரணத்தைக் கண்டறிய முடியும்.
இத்தொகுப்பில் தென் தமிழ்நாடு மற்றும் கேரள எல்லைகோடுகளையும் ஒட்டிய சாமானிய மக்கள் வழிபடும் சிறு தெய்வங்கள் உருவான/தெய்வங்களாக மாறிய கதைகள் கூறப்பட்டுள்ளது. குழந்தைக்காக தவமிருத்தல், பழிக்கு பழி, சாதிய வன்மம், காமம், மாய மந்திரம் முதலியவற்றை சுற்றி தான் கதை அமைந்துள்ளது.
சிறு தெய்வங்களை சுற்றியுள்ள கதைகளில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
நாட்டார் கதை தொகுப்புக்கள் தென் தமிழ்நாட்டு மற்றும் கேரள எல்லைகோடுகளையும் ஒட்டிய மக்களின் நாட்டுப்புறவியல் களம்
காலம் இது தான் என்று உணரமுடியாத ஒரு காலவரிசை. தமிழ்நாடுண்டின் பல சாதி மக்களின் சொல்ல்வண்ண கதையாக்கம்.
அ கா பெருமாள் - நாட்டுப்புறவியல் பாடல்களை ஒரு வறண்ட கதை திரட்டுக சொல்லி இருக்கிறார்
சாதிய வன்மம், குழந்தையின்மை மற்றும் வேண்டுதல் , பழிக்கு பழி , ரத்தம் , துரோகம் , மந்திரம்/மாயம் , காமம் தான் முக்கிய சொல்லாக்கம்
நாடார் , தேவர் , மறவர் , பிராமணர், இடையிற் , முனிவர் , பிள்ளை சாதி மக்கள் கதைகளின் இயக்கியாக இருக்கிறார்கள்.
நான் இந்த வாசிப்பை ஒரு பண்பாட்டு , வரலாறு நினைவாக படித்தேன். எனக்கு கதைகள், கதை மனிதர்கள் ஒன்றும் மனதுக்கு நிற்கவில்லை ஆனால் கதை களம் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியது . கதை சொல்லாடல் நாட்டுப்புறவியல் பாடல்களின் ஒரு வித எழுத்து வடிவம் என்பதால் ஒரு வறட்சி இருக்கிறது
A very interesting collection of tales about people who became to be worshipped as village Gods after a certain turn of events or curses that forced people to offer sacrifices and pacify those aggravated spirits who then turned to be Gods of worship.