ஒரு பந்தயப் புறா, ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டிய துவக்கப் புள்ளியில் இருந்து தான் அதுவரை பார்த்திராத நிலப்பரப்பு, வானிலை, காற்று, திசை அதோடு கொலைப் பறவைகளின் தாக்குதல் ஆகியவற்றைத் தாண்டி, பந்தய இலக்கான தன் வீட்டை அடைகிறது.
”ஹோமர்” எனும் இந்நாவல் கூடு சேரும் ஒரு பறவையைப் பற்றிய நாவல். ஆனால் அது மட்டுமே அல்ல, மதுரையின் உள்ளூர் அரசியல், அதிலுள்ள போட்டி, அதனால் ஏற்படும் ஒரு கொலை, கொலையில் சம்பந்தப்படும் ஓர் இளைஞனின் தப்பிக்கும் பயணம், கொலையுண்டவரின் குடும்பம் என பல அடுக்குகளாக விரிகிறது நாவல். நாம் இதுவரை பார்க்காத ஒரு புதிய உலகின் வாழ்வையும் தத்ரூபமாகக் கண்முன் நிறுத்துகிறது இந்நாவல். வாசிக்க சுவாரஸ்யமான திரில்லராகவும், அதே நேரம் தமிழ்ல் இதுவரை சொல்லாத ஒரு புதிய களத்தில் அழுத்தமான படைப்பாகவும் உருவாகியிருக்கிறது.
ஒரு பறவையின் வாழ்வுக்கும், மனிதனின் இருப்புக்குமான போராட்டத்தை இயல்பான மதுரைப் பேச்சு மொழியில் பேசும் ”ஹோமர்”, இதோ உங்கள் வாசிப்புக்காக.
இந்நாவல் அமேசான் #pentopublish4 போட்டியில் இருக்கிறது. நாவலை வாசியுங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் அமேசானில் 5 ஸ்டார் ரேட்டிங்கும், ஆங்கிலத்தில் சிறு ரெவ்யூவும் எழுத மறக்காதீர்கள்.
A Finest Worthy Bynge Read மதுரையின் வீதிகள் ஊடே புறா பந்தயம் மற்றும் அரசியல் களத்தின் பயணமாகும் புதினம் வாசகனுக்கு துளியும் சலிப்புத் தட்டாத வகையில் பயணம் செய்கிறது. வெகுநாட்களாக படிக்க எண்ணிய இப் புதினத்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படித்தது மீண்டும் தடைப்பட்ட என் வாசிப்பு பழக்கத்தை செப்பனிடும் என்று எண்ணுகிறேன். 💐வாழ்த்துக்கள் எழுத்தாளர் பாலகுமார் ஜெயராமன்.
அரசியல் வளர்ப்பு பிராணி மதுரை என ஒரு அழகிய உலகை கண் முன் காட்டியிருக்கிறார்.. புறாக்களை வளர்த்தவர்களை நேரில் பார்த்தவன் என்பதாலோ என்னமோ இந் நாவலை ரொம்ப நெருக்கமாக உணர்கிறேன். ""வீட்டோடு பிணைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஹோமர் புறா தானே!”" ஒற்றை கண்ணு சபஜா என்றாவது குருபாலின் வீட்டுக்கு சென்றடையும் என்று நானும் நம்புகிறேன்.🖤
இது ஒரு விருவிருப்பான குறுநாவல். மதுரையை களமாக கொண்டு புனையப்பட்டுள்ள கதை. முதல் அத்தியாயத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்யப்பட்டவர், அவர் குடும்பம், கொலை செய்தவன், அவன் பின்னணி என நகரும் இந்த நாவலின் இடையே புறாகள் வளர்க்கும் ஒரு மனிதன் பற்றிய கதையும் வருகிறது. அதுவும் சாதாரண புறக்கள் இல்லை. ரேஸ் புறா. இந்த மனிதனின் உணர்வும், புறாக்கள் மீதான பாசமமும் நம்மை ஏதோ செய்கிறது. இந்த இரண்டு தனித்தனி கதைகளையும் ரேஸ்க்கு சென்று திரும்பாத ஒரு புறா இணைக்கிறது. பந்தயத்திற்குகாக வளர்க்கப்படும் பறவைகள் குறித்து நிறைய தகவல்கள் எனக்கு பிராமிப்பாக இருக்கிறது. ஒரு புறா ரேஸ்க்கு எவ்வளவு செய்யவேண்டும், அதை செய்பவனின் உழைப்பு, அவன் மனநிலை ஆகியவை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கிறார் ஆசிரியர். புறா ரேஸ்யில் ஒரு அரசியல் உள்ளது, அது தன் எதிரியின் புறாக்களை ஈவு இரக்கமின்றி கொல்லவும் தயங்காது என்பதையும் கதையில் காட்டி இருக்கிறார். முழு கதையையும் ஒரே மூச்சை படித்து முடிக்க வைக்கும் வகையான எழுத்து. ஒரு சூப்பரான திரைக்கதை மெட்டீரில். இவரின் பிற நூல்களையும் வாசிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தருகிறது.
The author wrote the story in such a way that, once the book is taken out for reading, the reader will complete the book in one stretch. The subject he took to write this book is quite interesting and he narrated it in a thrilling fashion. Hats off
உங்களுடைய ஹோமர் படித்தேன்... அருமை..... புறாவை பற்றி தெரிந்துகொண்டேன்... especially last chapter.. கூடு திரும்புதல்... best luck for your future assignments... Thanks for the experience...
What a plot? What a story? I felt goosebumps in reading time. I loved it. Author of the book done good job and well-done . He is one of the prominent and unique author in current Tamil literature. what a man? I give 5 stars.
16+. புறாக்கள், புறா ரேஸ் பற்றி சில தகவல்கள் இருக்கிறது. அதுவே தனியா ஒரு குறுங்கதை போலத் தான் இருக்கிறது (Main கதையோடு ஒரு மெல்லிய அளவிற்கு தான் தொடர்பு).
This entire review has been hidden because of spoilers.