வணக்கம் தோழமைகளே.. வானவில் பூக்கள் எனது ஐந்தாவது நாவல். கனிந்தமனம் கதையின் மூன்றாம் பாகம். முதல் இரண்டு பாகங்களில் வந்த கதை மாந்தர்களின் வாரிசுகள், இக்கதையில் முதன்மை கதா பாத்திரங்களாக மாறுகின்றனர். ஒன்றாய் இருந்த உறவுகள் சூழ்நிலையின் காரணமாய் தனித்தனி தீவுகளாய் பிரிந்துவிட.. கால ஓட்டத்தில் மனதில் மட்டுமே இருந்த அவர்களின் உணர்வுகளின் தாக்கத்தினால்.. பிற்காலத்தில் நேரில் மீண்டும் சந்திக்கும் பொழுது நடந்தேறும் நிகழ்வுகளே இந்த வானவில் பூக்கள். சிறுவயது சண்டை வளர்ந்த பின்பும் தொடர்வதும்.. முறை மாமன், முறைப் பெண்ணுக்குள் இருக்கும் புரிதலும், ஊடலும், செல்லச் சண்டைகளும்.. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகளுக்குள் ஏற்படும் உணர்வுகளும்..