ம னிதனுடைய புத்தி விசித்திரமானது. ஆபத்துக் காலத்தில் இயற்கையாக உள்ள தன் சோம்பேறித்தனத்தையெல்லாம் உதறித்தள்ளி, சுறுசுறுப்புடன் வேலை செய்யும் தன்மை வாய்ந்தது. எப்பேர்ப்பட்ட தூங்கி வழியும் மூளையானாலும் ஆபத்து நெருங்கியவுடன் உயிரால் அறைந்து எழுப்பப்பட்டுத் தன்னைத்தானே சாணை பிடித்துக்கொண்டு கூர்மையாகி விடுகிறது. மந்தபுத்திகளின் சுபாவமே இப்படியென்றால் ரதனின் தீட்சண்யமான புத்தியைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? மதுவின் வேகத்தினால் ஏற்கனவே சூடேறிச் சிவந்திருந்த ரதனின் கண்கள், சேனாதிபதியின் உத்தரவுக்குப் பிறகு, உள்ளூர எழுந்த உக்கிரத்தால் இரண்டு நெருப்புப் பொறிகளைப் போல மாறி, ஒரு முறை கூடாரத்தைச் சுற்றி வளைத்துச் சுழன்றன. இடையிலிருந்த கச்சையை அவிழ்க்கப்போன அவன் கைகள் கச்சையிலேயே தங்கிவிட்டன. கைகளின் கட்டைவிரல்கள் இரண்டும் கச்சை மத்தியில் செருகப்பட்டிருந்த உடைவாளின் சொர்ணப் பிடியைத் தடவிக் கொடுத்தன. ஏதோ பெருத்த அபாயம் நேரிடும் சமயம் நெருங்கிவிட்டதென்பதை மோஹன்தாஸ் நன்றாகத் தெரிந்து கொண்டான். ரதனின் சலனமான நேத்திரங்களிலிருந்து அவன் புத்தி அந்தச் சமயம் துரிதமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டதென்று மோஹன்தாஸுக்கு சந்தேகமற விளங்கிவிட்டது. ரதனின் கபோலத்தின் உச்சிகளில் பொறிகளை வளைத்துக்கொடுத்தாற்போல் புடைத்து ஓடிய நரம்புகளும் மோஹன்தாஸின் முடிவு சரியென்பதைத் தெள்ளென விளக்கின. எந்த நிமிஷமும் கூடாரம் அமளி துமளிப் படலாமென்பதை உணர்ந்து கொண்ட மோஹன்தாஸ் ஜெய்ஸிங்கைப் பார்த்தான். ஜெய்ஸிங்குக்கும் நிலைமை புரிந்துதானிருந்தது. ஆனால் அந்தத் தருணத்தில் அவன் என்ன செய்ய முடியும்? சேனாதிபதி ஒரு முறை இட்ட உத்தரவை மாற்றியறியாதவன். அவசரப்பட்டு நிலைமை தெரியாமல் உத்தரவிடுபவனும் அல்ல. எப்பொழுது துணிச்சலுடன் இவ்வாறு ரதனைச் சிறைசெய்யும்படி உத்தரவிட்டிருக்கிறானோ அப்பொழுதே அந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு வேண்டிய முன்னேற்பாட்டுடனேயே அவன் வந்திருக்க வேண்டுமென்பதை ஜெய்ஸிங் நன்றாக அறிந்திருந்தான். அவன் நினைத்ததில் தவறில்லையென்பதை டைபர்கானின் அடுத்த வார்த்தைகள் நிரூபித்தன. “ரதன்! தப்புவதற்கு மார்க்கம் எதுமிருப்பதாக நினைக்க வேண்டாம். எதிர்ப்பு எவ்விதப்பலனையும் அளிக்காது. நீயாகிலும் சரி, உன்னைச் சேர்ந்த இந்த ராஜபுத்திரர்களில் யாராகிலும் சரி, எந்தவிதமாக எதிர்ப்பைக் காட்டினாலும் உடனே இந்தக்கூடாரத்தைச் சூழ்ந்து இங்குள்ள அனைவரையும் எலும்புகூட அகப்படாமல் படுசூரணம் செய்து விடும்படி மொகலாய சைன்னியத்துக்கு உத்தரவிட்டிருக்கிறேன். இங்கு ஏதாவது ரகனை நடந்தால் உன்னுடைய ராஜபுத்திரப்பட்டாளம் உடனே உதவிக்கு வராதபடி அவற்றைச் சைன்னியத்தின் முகப்பில் நிற்கும்படி உத்தரவிட்டனுப்பிவிட்டேன். இந்தக் கூடாரத்திற்கும் உன் பட்டாளத்துக்கும் இடையே சுமார் ஐயாயிரம் மொகலாய வீரர்கள் இருக்கிறார்கள். ஆகவே, கண்மூடிக் கண் திறப்பதற்குள் காரியம் முடிந்து விடும், ஜாக்கிரதை!” என்று டைபர்கான் எச்சரித்துவிட்டு, “சிப்பாய்! அவனை என் கூடாரத்துக்குக் கொண்டுவா” என்று சொல்லிப் புறப்படச் சித்தமானான். டைபர்கான் தன் ஏற்பாடுகளைப் பற்றி விவரித்த விஷயங்கள் மற்றவர்கள் மனத்தில் எந்தவித உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டனவோ தெரியாது. ஆனால் ரதன் சந்தாவத்தின் மனத்தில் எந்தவித பயத்தையோ ஆயாசத்தையோ அவை உண்டாக்கியதாகத் தெரியவில்லை. புறப்படத் துவங்கிய சேனாதிபதியின் காலை உள்ளுக்கிழுக்க ரதன் ஒரு சந்தேகம் கேட்டான். “டைபர்கான்! கண்ணை மூடித்திறக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்?” என்றான். டைபர்கான் சற்றுத்திரும்பி ரதனை ஒருமுறை பார்த்தான். இத்தனை ஆபத்திலும் விளையாட்டாகப் பேசும் துணிச்சலான எதிரியைப் பார்த்து டைபர்கான் ஆச்சரியப்பட்டான். “அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன ரதன்?” என்று டைபர்கானும் சிறிது நகைச்சுவையைக் காட்டினான்.
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
கதையின் ஆரம்பத்தில் சிறிது தொய்வாக இருந்தாலும் அகிலாதேவியிடம் ரதன் சந்தாவத் ஸலும்பரா வந்துச் சேர்ந்த பின்பு கதையின் திருப்புமுனைத் தென்படுகிறது. அதன்பின்பு வரும் நிகழ்வுகள் கதையின் வேகத்தை அதிகரித்துக் கொண்டேச் செல்கின்றன. ராஜப்புத்திரர்களுக்கும் மொகாலயர்களுக்கும் இடையிலான போரில் ரதன் மொகாலயர்க்குப் பணிப்புரிகிறார். பின்பு இவர் எப்படி ராஜபுதானத்தோடு சேர்கிறார் என்பதுதான் கதை. மொத்தத்தில் ஜீவபூமி புது ஜீவன் பெற்றது.
Jeeva Bhoomi felt like a book written straight out of the standard Tamil historical fiction template, except with its characters oddly relocated to central India. While this might have been an attempt at variety, the setting didn’t add any real freshness, nor did the characters contribute much to the larger narrative.
The so-called suspense in the story was largely superficial—the trajectory of the plot was utterly predictable from start to finish. For a genre that thrives on building atmosphere, intrigue, and dramatic tension, this predictability drained away much of the reading pleasure.
Stylistically, the writing lacks the poetic rhythm one expects in Tamil literature. Compared to the lyrical elegance of Kalki or the evocative prose of Gokul, Sandilyan’s language here comes across as almost mechanical. Instead of transporting the reader into a different era, it felt more like a cheap imitation of greater works.
In the end, Jeeva Bhoomi is another recycled storyline with little soul.
கதையின் கரு நாயகனும் நாயகியும் எப்படி இணைகிறார்கள் என்றாலும், ராஜபுதனர்களின் போர்த்திறமையை அருமையாக உள்புகுத்தியிருக்கிறார். அகிலாவுக்கும் ரதனுக்கும் இடையேயான காதல் உருவான விதமும் அதன் வளர்ச்சியும் அருமையாக கூறப்பட்டுள்ளன