தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2017வரை அறுபத்தோராண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு.“பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்” என்று கூறும் அவர், தான் எழுதிய இச்சிறிய கதைகளின் வாயிலாக என்றுமே எழுதி முடிக்கமுடியாத அந்தப் பெரிய கதையான ‘வாழ்வின்’ பக்கங்களை நமக்குப் புரட்டிக் காட்டுகிறார். முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாத அக்கதையினை நாம் பகுதிபகுதியாக வாசித்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு தருணத்தில் அது நம்மைப் பற்றிய கதையாக மாறிவிடுவதும் அசோகமித்திரன் கதைகளில் இயல்பாக நடந்தேறுகிறது.தனி அனுபவங்களாக மட்டும் சுருங்கிவிடாம
1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.
அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.
சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
Managed to finish Asokamithran's complete short stories over a period of three months.
Jeyamohan once mentioned of all the tamil modern writers who wrote in the past, two of them can be considered as genius one was Puthumaipiththan and the other Asokamithran. In this humongous collection stories that Asokamithran wrote over a period of five decades, there are approximately 250 stories from 1956 to 2017. For more than 5 decades, Asokamithran wrote with supreme creativity, charismatic humour, a rare sense of perception stemming from an empathy towards all life. It was a truly rewarding and humbling experience. As i finished reading i wish i could sit next to him as he wrote these stories in the parks of Thiyagaraya nagar and touch his hands and express my sincere admiration towards this rare genius. Stories of Asokamithran that I liked.
1. டயரி 2. வாழ்விலே ஒரு முறை 3. கோலம் 4. அம்மாவுக்காக ஒரு நாள் 5. மூன்று ஜதை இருப்புப்பாதைகள் 6. இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும 7. ஐந்நூறு கோப்பைத் தட்டுகள 8. விமோசனம் 9. தப்ப முடியாது 10. நம்பிக்கை 11. பார்வை 12. வரவேற்பு அறையில 13. வெறி 14. இனி வேண்டியதில்ல 15. பிரயாணம் 16. திருப்பம் 17. காத்திருத்தல் 18. எலி 19. வழி 20. புலிக் கலைஞன் 21. காந்தி 22. கடன் 23. காலமும் ஐந்து குழந்தைகளும் 24. எண்கள் 25. உண்மை வேட்கை 26. தொப்பி 27. விண்ணப்பம் 28. புண் உமிழ் குருதி 29. நானும் ஜே. ராமகிருஷ்ணராஜுவும் சேர்ந்து எடுத்த சினிமா படம் 30. புதுப்பழக்கம் 31. அவள் ஒருத்திதான் 32. தந்தைக்காக . . . 33. இவனை எப்படி? 34. பளு 35. விரல் 36. பறவை வேட்டை 37. விடிவதற்குள் 38. விருத்தி 39. அம்மாவின் பொய்கள் 40. உத்தர ராமாயணம் 41. பந்தயம் 42. விடுமுறை 43. கொடியேற்றம் 44. பிப்லப் சௌதுரிக்கு கடன் மனு 45. அப்பாவிடம் என்ன சொல்வது? 46. குழந்தைகள் 47. மறதி 48. இரு நிமிடங்கள் 49. ராஜாவுக்கு ஆபத்து 50. திருநீலகண்டர் 51. கிணறு 52. கண்கள் 53. மணியோசை 54. மூன்று ‘ஏ’ பாட்டரி 55. வெள்ளை மரணங்கள் 56. 1945இல் இப்படியெல்லாம் இருந்தது 57. தோஸ்த் 58. குழந்தைகள் இறக்கும்போது . . . 59. சகுனம் 60. அடுத்த முறை 61. தோல் பை 62. இரண்டு விரல் தட்டச்சு 63. இன்று வேண்டாத கிணறு 64. பாண்டிபஜார் பீடா 65. லாலாகுடாவை நோக்கி 66. டெரன்ஸ் சிரித்தான் 67. நான் கிரிக்கெட் கோஷ்டிக்கு காப்டன் ஆன வரலாறு