Jump to ratings and reviews
Rate this book

வெண்முரசு #22

தீயின் எடை / Theeyin Edai (வெண்முரசு / Venmurasu Book 22)

Rate this book
குருஷேத்ரக் களத்தில் இருண்டவை அனைத்தும் பெய்தொழியும் இறுதி நிகழும் நாவல் இது. போரின் முடிவில் அனைத்தையும் எரித்தபடி எழுகிறது பேரனல். அது விரித்த சாம்பலைக் கரைந்து ஒழுகியபடி பொழிகிறது பெருமழை. மண் தன்னைத் தன்னைக்கொண்டே மூடிக்கொள்கிறது. மாபெரும் வயிறென ஆகிறது. அனைத்தையும் செரித்துக் கொள்ளத் தொடங்குகிறது.
எஞ்சுவதென்ன என்பது குருஷேத்ரம் எழுப்பும் வினா. எஞ்சியவை வஞ்சமும் ஆறாத்துயரும் மட்டுமே. வெற்றியும் தோல்வியும் பொருளற்றவை ஆயின. உயிர்க்கொடையும் அருந்திறல்நிகழ்வும் வீணென்றாயின. மானுடரை சருகு என எரித்து அங்கே தன்னை நிறுவிக்கொண்டது ஒரு பேரனல். தீயின் எடை அந்த அனலைப்பற்றிய நாவல்.

811 pages, Kindle Edition

Published June 1, 2020

2 people are currently reading
57 people want to read

About the author

Jeyamohan

209 books845 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (68%)
4 stars
7 (31%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
December 7, 2023
முதன்முறையாக அறம் கூற்றென வந்து பாண்டவர்கள் முன் நின்றிருக்கிறது. சற்று தாமதமாக என்றாலும் இறுதியில் அது வந்தேவிட்டது.

தர்மனின் வில்லான 'தயை' பற்றிய பகுதி மிகவும் அருமையாக இருந்தது. அதேபோல ஸ்தூனகர்ணனின் கதையும், சகுனி பார்பாரிகனிடம் "அக்கையிடம் சொல்லுங்கள்" என கூறும் பகுதியும் சிறப்பாக இருந்தது.

இருட்கனி மற்றும் தீயின் எடையின் மூலம் தந்தை சல்யர் என் மனதை கவர்ந்துவிட்டார். களத்தில் அவர் ஆற்றும் பெருஞ்செயல்கள் திகைக்கச் செய்தன. அவருடைய முடிவும் எதிர்பாரா வண்ணம் அமைந்திருந்தது.

போர் முடிந்த பின், சல்யரால் ஆடையிழந்து, ஆணவம் அழிந்து, பித்தேறிய பார்த்தன் களத்தில் கீழே கிடக்கும் ஆடைகளையும் கவசங்களையும் எடுத்தெடுத்து அணிந்து கொண்டே இருக்கும் இடம் அருமையிலும் அருமை. இந்த பகுதி ஜாக் லண்டனின் "Love of Life" சிறுகதையையும், யான் மார்டலின் "Life of Pi" நாவலையும் எனக்கு நினைவுப்படுத்தியது.

போரில் பீமன் தன்னுடைய கதையை இழந்துவிட்டதால் துரியோதனன் அவனை கொல்லாமல் விட்டு விலகிச் செல்லும் இடம் அவனுடைய மாண்பை காட்டியது.

துரியோதனனுக்கும் பீமனுக்குமான இறுதி போரில் பீமன் நெறிபிறழ்ந்து துரியோதனனின் தொடையறைந்து கொல்லும் இடம் பீமனின் எல்லையில்லா கீழ்மைக்கு மற்றுமொரு சான்றாக அமைந்தது.

துரியோதனன் இறந்தது தெரியாமல், போர் முடிந்ததும் அறியாமல் பீதர்ஆடியின் மூலமாக துரியோதனனின் பாவையை  துரியோதனன் என்றே எண்ணி சஞ்சயன் ஆற்றும் போர் வர்ணனைதான் இந்நாவலின் உச்சம் என்று நினைக்கிறேன்.

அதேபோல் துரியோதனனை கொன்றபின் துரியோதனனுடைய பாவையிடம் சண்டையிடும் பீமன், அதனை வெல்ல முடியாமல் தப்பியோடும் இடம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

தனது பெரிய தந்தை நெறிபிறழ்ந்து கொல்லப்பட்டுவிட்டார் என்பதை அறிந்து சதானீகன் குமுறும் இடமும், அதன் பின் பிரதிவிந்தியனுக்கு அவன் இடும் தீச்சொல்லும் மிகவும் கூர்மையாக வந்து இறங்கியது.

சதானீகனின் கூற்றை ஆமோதிக்கும் சர்வதனும் சுதசோமனும் சுருதகீர்த்தியும் என் நெஞ்சில் ஆழப்பதிந்துவிட்டனர்.

// சுருதகீர்த்தி நகைக்க சர்வதனும் சுதசோமனும் அச்சிரிப்பில் இணைந்துகொண்டனர்.//

என்ற இந்த வரிகள் என் உள்ளத்தை அசைத்துவிட்டது.

திசைதேர் வெள்ளம், கார்கடல், இருட்கனி ஆகியவை என்னுள் ஏற்படுத்திய மன அழுத்தத்துக்கும் காயத்துக்கும் தீயின் எடை அருமருந்தாக அமைந்தது.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.