Jump to ratings and reviews
Rate this book

இவளொரு புதுக் கவிதை

Rate this book
திருமணத்திற்கு முன் தினம் இரவு யுகேந்திரன் மாதங்கியிடம் தான் வேறு பெண்ணை விரும்புவதால் திருமணத்தை நிறுத்த சொல்லுகிறான். குடும்பம் மற்றும் உறவு வட்டத்தை எண்ணி மாதங்கி மறுத்து விட்டாள். ஆனால் அதன் விளைவாக புகுந்த வீட்டில் நரக வேதனை அனுபவித்தாள்.. அவள் துன்பம் தீருமா?

155 pages, Kindle Edition

Published May 22, 2021

54 people are currently reading
205 people want to read

About the author

Ramani Chandran

273 books529 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
61 (33%)
4 stars
46 (25%)
3 stars
34 (18%)
2 stars
21 (11%)
1 star
18 (10%)
Displaying 1 - 2 of 2 reviews
2,121 reviews1,109 followers
November 2, 2017
காதல் முன்பு அவமானங்கள் எல்லாம் பெரிதல்ல என்று தாலி கயிற்றின் மேஜிக்கை சொல்லும் கதை...

திருமணத்திற்கு முதல்நாள் அன்று அதை நிறுத்த சொன்ன மாப்பிள்ளையான யுகேந்திரன் சொல்வதைக் கேட்காமல் தந்தை செய்த செலவு அவர்களின் சந்தோஷம் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்திய மணமகள் மாதங்கி அத்திருமணத்தை நடத்தியதால் புகுந்த வீட்டில் அவனுக்கு ஒருபொருட்டேயில்லாமல் போகிறாள்.

பணத்தை மட்டுமே குறிவைக்கும் புகுந்த வீட்டில் கணவனின் அணுசரனையும் இல்லாமல் போனதால் அவர்களிடம் அவமானப்பட்டுச் சகித்துக் கொண்டிருப்பவள் தன் தங்கைகளின் திருமணத்திற்குப் பின்பே அவ்வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று உறுதியுடன் அனைத்தையும் எதிர்கொள்கிறாள்.

கணவனுக்கு ஏற்கனவே வேறு ஒருவளிடம் இருக்கும் காதலையும் ஏற்றுக் கொண்டவள் அதன் பிறகு அவனின் மனமாற்றத்தை கண்ட பிறகு மணவாழ்க்கை செய்த மேஜிக்கால் அவன் கொடுத்த துன்பங்களையெல்லாம் மறந்து கணவனை மன்னித்துவிடுகிறாள்.

8 reviews
August 7, 2025
இந்தக் கதை முற்றிலும் domestic violence என்னும் புகுந்த வீட்டுக் கொடுமைகளைச் சார்ந்தது. படித்து முடித்த பிறகு மிகவும் அருவருப்பாக இருந்தது. ஏனெனில், இது ரமணி சந்திரன் பாணியில் அல்லாமல் தரம் தாழ்ந்த விதத்தில், தரம் குறைந்த மொழியில் எழுதி இருந்தது.

கதாநாயகன் கதாநாயகியை மிகக் கோரமாக அடிக்கிறான். ஆனால் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அவளாகவே அவனை மன்னித்து அவனைத் தேடிச் செல்கிறாள். அதற்கு பின்பே அவன் மன்னிப்பு கோருகிறான். இல்லையெனில், அவனுக்கு மன்னிப்புக் கோரும் எண்ணமே இருப்பதாகவே தெரியவில்லை! இறுதியில் ஓர் இடத்தில், அவள் கூறுகிறாள் "அடித்தது தப்பு தான் ஆனால் காரணங்களை கேட்ட பிறகு அது பெரிய தப்பில்லை!"..

விவகாரத்து தான் இதற்குத் தீர்வு என்று நான் கூறவில்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. ஆனால், குறைந்தபட்சமாக மன்னிப்புக் கோரும் பகுதியை திருப்திகரமாக கையாண்டு இருக்கலாம்!

இந்த எழுத்தாளரை எனக்கு மிகவும் பிடிக்கும்.இவரின் கதைகளை நான் என் சிறு வயதில் இருந்து படித்து வருகிறேன். என்றாலும், இவரது எழுத்தில் சில கதைகள் முகம் சுழிக்கும் படியும் இருந்திருக்கின்றன.
உதா:
ஒரு கல்யாணத்தின் கதை!
என் கண்ணின் பாவையன்றோ!
கண்ணே கண்மணியே!

இன்னும் நிறைய இதுபோல்! கடந்த 10 ஆண்டு காலமாக இவரின் கதைகள் மிகவும் அறுவையாக, சலிப்பாக இருக்கின்றன!
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.