எனக்கு சின்ன வயசுல இருந்தே அண்ணன் தம்பி இவுங்க தான் உலகம்... அவுங்கள தாண்டி யோசிச்சதும் இல்ல, யோசனையை போக விட்டதும் இல்ல.என் வீட்ல எல்லாம் என்ன அவ்ளோ நம்புறாங்க.இந்த கொரோனா , lock down, flight issues-லாம் அவுங்களுக்கு புரிஞ்சாலும்..நான் எதாச்சும் பண்ணி கார்த்திய வர வச்சு கல்யாணத்த அதே தேதில நடத்துவனு நம்புறாங்க.அந்த நம்பிக்கைய உடைக்க விரும்பல.ஆனா, அத எப்புடி சாத்தியமாக்குரதுன்னு தெரியல.அத உங்க கிட்ட உதவி கேட்டு வந்துருக்கேன்.இது சரியா, தப்பானு கூட தெரியல.இதனால கார்த்தி-யாழினியோட கல்யாணம் நின்னுட கூடாது.ஆனா, என் அண்ணனுங்களுக்கு சந்தோசம் தர்ற எந்த தப்ப வேணாலும் பண்ண நான் தயாரா இருக்கேன்.ப்ளீஸ், நீங்க தப்பா எடுத்துக்காம உங்க முடிவ சொல்லிடுங்க....