வன ஆராய்ச்சி செய்யும் சஞ்ஜித் தன் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருக்க அங்கு அவனது தாய்மாமா பொண்ணு ஜனனியை அவனுக்கு திருமணம் செய்ய அவனது தாத்தா சீனிவாசன் முடிவெடுத்திருக்கின்றார்.ஆனால் சஞ்ஜித்திற்கோ அதில் விருப்பமில்லை.இது தெரியாமல் அவனது தம்பி சம்ரித் ஜனனியை பதிவுதிருமணம் செய்துக்கொண்டு அழைத்து வருகிறான்.அதில் எல்லோரும் அதிர்ச்சியடைய,சஞ்ஜித்தோ அதில் நிம்மதியாகி தன்னுடைய ஆராய்ச்சிக்காக கேரள கர்நாடாக எல்லையை ஒட்டி உள்ள வனப்பகுதிக்கு சென்றுவிடுகிறான்.ஏற்கனவே அவனுக்கு ஜாதகதோஷம் இருக்கின்றதாக பரிகார பூஜை செய்ய சீனிவாசன் கேரளாவிலிருந்து நம்பூதிரியை ஏற்பாடு செய்திருந்தார்.அதை மறுத்துவிட்டு சஞ்ஜித் தனது சககுழு நண்பர்