மகத்தான இலக்கியங்களை சிருஷ்டித்து, உயர்வடைந்தவர்களில் ரஷ்ய மேதை டால்ஸ்டாயும் ஒருவர். இலக்கிய வானில் குன்றாத ஒளி வீசித் திகழும் தனிப் பெரும் நட்சத்திரம் அவர்.உண்மையின் உயர்வு, எளிய வாழ்வு, தெய்வ நம்பிக்கை, மனித அபிமானம், பரோபகாரச் சிறப்பு போன்ற கருத்துக்களை வலியுறுத்துவதற்காகவே டால்ஸ்டாய் பெரும்பாலான கதைகளை எழுதியிருக்கிறார். என்றாலும், அவருடைய கதைகள் வெறும் உபதேசக் கதைகள் மாதிரி சாரமற்றவை அல்ல. எளிமையும் இனிமையும் கதைச் சுவையும் நிறைந்த இலக்கியப் படையல்கள் அவை.- வல்லிக்கண்ணன்