Jump to ratings and reviews
Rate this book

பால காண்டம்

Rate this book
நா.முத்துக்குமார் இத்தொகுப்பில் இளமைக் காலத்தின் அழியாத சுவடுகளை, அதன் நெகிழ்ச்சியூட்டும் மனப் பதிவுகளை துள்ளியமாகச் சித்தரிக்கிறார். குங்குமத்தில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் இவை

72 pages, Paperback

First published January 1, 2005

10 people are currently reading
330 people want to read

About the author

Na. Muthukumar

16 books324 followers
Nagarajan Muthukumar (12 July 1975 – 14 August 2016) was a Tamil poet, lyricist, and author. Best known for his Tamil language film songs, he received the most Filmfare Awards for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National Film Award for Best Lyrics for his works in Thanga Meenkal (2013) and Saivam (2014).

Muthukumar grew up in Kannikapuram village in Kancheepuram, India in a middle-class family. He has a brother Ramesh Kumar. At the age of six and a half, he lost his mother. At a young age, he acquired an interest in reading. He began his career working under Balu Mahendra for four years. He was later offered to write lyrics in the film Veera Nadai, directed by Seeman. He has been credited as a dialogue writer in a few films, including Kireedam (2007) and Vaaranam Aayiram (2008). His last movie as a lyricist is Sarvam Thaala Mayam with A.R. Rahman.

Na. Muthukumar was born at Kannikapuram, Kancheepuram on 12 July 1975. He did his graduation in Physics at Kancheepuram Pachaippa college. He pursued his master's degree in Tamil at Chennai Pachaippa college. With the aim of becoming a director, he joined as an assistant director to the legendary Balumahendra. His Poem 'Thoor' took him to great heights. On 14 June 2006, he married Jeevalakshmi in Vadapalani, Chennai.

Muthukumar, who had been suffering from jaundice for a long time, died on the morning of 14 August 2016, at his Chennai residence, of cardiac arrest. He is survived by his wife, son and daughter.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
56 (50%)
4 stars
34 (30%)
3 stars
13 (11%)
2 stars
6 (5%)
1 star
3 (2%)
Displaying 1 - 13 of 13 reviews
Profile Image for Ragul.
12 reviews3 followers
January 22, 2024
பால காண்டம் ஒரு நதியை போன்றது.தண்ணீர் வற்றி விற்றாலும் மணலுக்கடியில் அந்த நதி ஓடி கொண்டு தான் இருக்கும்!

நா.முத்துக்குமார்❤️
251 reviews38 followers
December 18, 2024
புத்தகம் : பால காண்டம்
எழுத்தாளர்: நா. முத்துக்குமார்
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள் : 71


🔆 அனைவருக்கும் மிகப் பிடித்தமான கவிஞர் நா. முத்துக்குமார் அவர்கள். தன் பால்ய வயதில் சந்தித்த நபர்கள் பாதித்த விஷயங்கள் என அனைத்தையும் விரிவாக எழுதியுள்ளார்.

🔆 கல்லூரி படிக்கும் போது அவருடன் படித்த தாஜ்மஹால்தாசன், அங்கு இருக்கும் மாணவர்களின் காதலுக்கு கவிதை எழுதி கொடுத்தவர். கடைசியில் அவர் காதல் வலையில் சிக்க வில்லை. நம் கவிஞர் தான் தினமும் பத்து காதல் பாடல்கள் எழுதி வருகிறார்.

🔆 தனது தந்தையை மதுவால் இழந்த ஒருவர், படித்து பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். நாகரிக வாழ்க்கை என்ற பெயரில் அவரும் மதுவுக்கு அடிமையாகி விட்டார்.

🔆 "கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேன் அடி"

புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for தீபிகா ச.
9 reviews1 follower
Read
October 27, 2022
Personally enaku pidichu irunthathu. Nambaa life laa santhikura oru oruthaarum oru experience ,athaa Intha book puriyaa vacheeduchu. Always fan girl for Na.Mu.🌻🦋🖤
Profile Image for Anitha Ponraj.
277 reviews43 followers
December 11, 2022
22rm162
71/50

புத்தகம் :பால காண்டம்
ஆசிரியர் :நா. முத்துக்குமார்
பக்கங்கள் :71
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்

சிறுவயதில் நாம் கடந்து வந்த அனுபவங்கள் சில நம் மனதில் பசுமரத்தாணி போல் ஆழமாக பதிந்து விடுவதுண்டு. வளர்ந்துவிட்ட பின்னும் நமக்கு இருக்கும் சில குணநலன்கள் பல நம் சிறுவயது அனுபவங்களின் தாக்கமாக இருக்கும்.

நா.மு அவர்களின் பால்ய கால நாட்களின் அனுபவங்கள், மனிதர்களின் கதையின் தொகுப்பு தான் இந்த பால காண்டம். அவர் எழுதிய கவிதை புத்தகங்கள் பிடித்த அதே அளவுக்கு, அவர் கட்டுரைத் தொகுப்புகளில் மேற்கோள் காட்டப்படும் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. எதார்த்தமான நா. முத்துக்குமாரின் எழுத்துநடை, சிந்தனைகளை இந்த புத்தகத்திலும் ரசிக்க முடிகிறது.
Profile Image for Balaji M.
221 reviews14 followers
November 9, 2023
பாலகாண்டம்
(“நா.முத்துகுமார் கட்டுரைகள்” தொகுப்பு)

15 கட்டுரைகளை கொண்டுள்ளது….3 லிருந்து 5 பக்கங்களுக்கு மிகாத கட்டுரைகள்.

தனது பாலபிராயத்திலிருந்து கல்லூரி, பாடலாசிரியர் ஆனது வரை தான் சந்தித்த நபர்களை பற்றி, அவர்களிடமிருந்து பெற்ற அனுபவத்தை பற்றி, தனது ஞாபக பெட்டகத்திலிருந்தெடுத்து, கவிதைநடையி்ல் கட்டுரைகளாக தீட்டியிருக்கிறார், திரு நா. முத்துகுமார்.

ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் குறு முன்னுரைப் போல., நாலைந்து வரிக் கவிதையோ, சொற்றொடரோ அதை எழுதியவரின் பெயருடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.


1. "இரண்டாம் தொப்புள் கொடி" - தனது நண்பனுக்கும் அவரது அக்காவுக்குமான பாசப்பிணைப்பை கூறுகிறது இக்கட்டுரை

2. "தாஜமஹால்தாசன்" - காதல் கவிதைகள் கிறுக்கும் கல்லூரியில் சீனியர் மாணவர் பற்றி.

3. "(a+b)? = a?+b?+2ab" - தனது கணக்கு ஆசிரியர் பற்றி.

4. "தேடித் தேடி தொலைந்தவன்" - பள்ளிப்பருவத்திலியே மதுஒழிப்பு வேண்டும் எனக் கூறிய நண்பனைப் பற்றி.

5. "கேளுங்கள் கொடுக்கப்படாது" - இலக்கிய கூட்டங்களில் கேள்வி கேட்ட மதிமாறன் எனும் குடும்பஸ்தனை பற்றி.

6. "எழுத்து, பொருள், சொல்" - அனைவருக்கும் கேலியாக பெயர் வைக்கும் கல்லூரி நண்பன் கண்ணன் பற்றி.

7. "வெந்து தணிந்த காடு" - சீட்டு பிடிக்கும் வீட்டு பரிமளா அக்கா, தனது கணவனின் கொடுமை தாளாது, அவனை கொன்றது பற்றி.

8. "ஒரு ரூபாய் ரகசியம்" - தனது தந்தையின் நட்பா, சொந்தமா எனப் புரிந்தகொள்ளமுடியாத, லட்சுமணன். அவர் 'தினமும் ஒரு ரூபாய் வாங்கும் உறவு' எனப் புரிந்துகொண்டது பற்றி.

9. "பவழ நாட்டு இளவரசன்" - தனது ஊர் திருவிழாவில் கூத்துக்கட்டும் கணபதி வாத்தியார், ராஜபார்ட் கிருஷ்ணன் பற்றி.

10. "அஞ்சு ரூபா டாக்டர்" - தனது ஊர் மருத்துவர் பற்றி.

11. "காலம் எழுதும் கடிதம்" - தனது பால்யத்தில் காதல் தூதுவனாக, காதலருக்கு கடித போக்குவரத்துக்கு பயன்பட்டது பற்றி.

12. "நிலா மிதக்கும் பள்ளங்கள்" - தனது ஊரில் உள்ள கோவிந்தசாமி எனும், ஆங்கிலம் பேசும் ஜீனியஸ் தாத்தா பற்றி.

13. "கடவுளை கண்ட இடங்கள்" - கடவுள் மற்றும் பொதுவுடைமை மீதான தனது புரிதல் பற்றி.

14. "வளர்சிதை மாற்றம்" - பால்யத்தில் தாம் வளர்த்த நாய், பூனை, கிளி, நரி, பொன்வண்டு என பல அஃறிணைகள் பற்றி

15. "மாய சிலேட்டு பலகை" - மனம் எனும் மாய சிலேட்டு பலகை, தனது பால காண்டத்தை நினைவூட்டியதை பற்றி.



புத்தகத்திலிருந்து....

\
"காதலைக் காதல் என்றும் சொல்லலாம்!" - பூமா ஈஸ்வரமூர்த்தி
/

\
குழந்தைகள் , ஒவ்வொன்றுக்கும் புதுப்புது பெயர்களை கண்டுபிடிக்கிறார்கள் . எல்லா குழந்தைகளின் அகராதியிலும், "நாய்" என்றால் 'ஜூஜூ',... 'பறவை' என்றால் 'கீக்கி'! மொழி தோன்றுவதற்கு முந்தைய ஆதிவாசிக்கு, மரம் என்பது ஒரு சித்திரம். புலி என்பது ஒரு பயசித்திரம்.
/'

\
முதன்முதலில் ஒரு மரத்துக்கு 'மரம்' என்று பெயர் வைத்தவனுடைய கற்பனையின் பரவசம் அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் போயிற்று. மரத்தை மரமாக பார்க்காமல், மொழியறிந்த குழந்தைகள் மாமரமாகப் பார்க்கின்றன. உலகம் தன் இயந்திர கைகளால் ஒரு குழந்தையை சிறுவனாக மாற்றுகிறது. பின்னாட்களில் அந்த சிறுவன் மாமரத்தை கட்டிலாக பார்க்கிறபோது இளைஞன் ஆகிறான். கதவாக பார்க்கிறபோது குடும்பஸ்தன் ஆகிறான். வெட்டி எரிகிற போது வயோதிகன் ஆகிறான்.
/

\
'நம் சமூகம் தாய் வழி சமூகம் இனக் குழுவின் தலைவியாக பெண்ணே இருந்தாள்...' என்று ஆய்வுகள் சொல்கின்றன. வரலாற்றின் எந்த தருணத்தில், எந்த இடத்தில் பெண்ணின் கையில் இருந்து சிக்கிமுக்கிக் கல்லின் தீ பறிக்கப்பட்டு சமையலறையின் தீப்பெட்டி கொடுக்கப்பட்டதோ.. சிறு தெய்வங்களான பெண் கடவுள்கள் பின் தள்ளப்பட்டு ஆண் கடவுள்கள் முன்னிறுத்தப்பட்டனவோ... அந்த தினத்திலிருந்துதான் 'தியாகம்' என்னும் இரும்புக்கம்பிகளுக்குள் பெண்கள் தள்ளப்பட்டிருக்கக்கூடும்.

ஒவ்வொரு பெண்ணும் சமையல் உப்பிடமிருந்து விசுவாசத்தை கற்றுக்கொள்கின்றாள். வெங்காயத்திடமிருந்து கண்ணீரை பெற்றுக் கொள்கிறாள். இட்லித்தட்டுகளிலிருந்து வெந்து தணியவும், ஈர விறகுகளிடமிருந்து உள்ளுக்குள் புகையவும் புரிந்துகொள்கிறாள். ஒரு சில பெண்கள் மட்டுமே இவற்றையெல்லாம் தாண்டி மிளகாயிடமிருந்து காரத்தையும், கோபத்தையும் கற்றுக் க���ள்கிறார்கள்...
/

\
ஒரு ஐந்து நிமிடம் ஆழ்மனதை தொட்டுப் பார்த்து, என்னென்ன நினைக்கிறோமோ அவற்றையெல்லாம், ஒரு காகிதத்தில் எழுதி வைத்துப் பார்த்தால் நம்மிதே நமக்கு பயம் வந்துவிடும். வாழ்வின் ஆகச்சிறந்த புதிரை, மனமென்னும் கடலுக்குள் மீண்டும் மீண்டும் மோதி உடையும் அலைகளே தோற்றுவிக்கின்றன.
/

\
'கடவுளை மனதால் அடைவது அத்தனை எளிதல்ல. ஏனெனில் மனம் என்பது பைத்திய எண்ணங்களின் தொகுப்பு! காற்றில் மிதக்கும் தூசிகளுக்கு திசை என்பது இல்லை!'
/

\
வேலையில்லாதவர்களின் பகலும்,நோயாளிகளின் இரவும் நீளமானவை. இருவரின் கடிகாரத்திலும் இடம் வலமாக ஆடும் பெண்டுளத்தில் ஒரு பக்கம் விரக்தியும், இன்னொரு பக்கம் வலியும், காலத்தை நகரவிடாமல் தடுக்கின்றன.
/

\
அஸ்தமன காலத்தில் சூரியன் தன் கதிர்களை வெளிர்ந்த நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறமாக மாற்றிக் கொள்ளும். 'உச்சி வெயில் நேரத்தில் உலகெலாம் விரிந்து உக்கிரம் உமிழ்ந்த முகமா இது' என வியக்கும் அளவுக்கு தன் முகத்தை சாந்தமாக்கி கொள்ளும். 'புதிதாக இம்மண்ணில் பிறந்த புல் பூண்டுகளே! செடி, கொடிகளே! போய் வருகிறேன். உங்களுக்குள் என் வெப்பத்தையும், வானத்துக்குள் என் வண்ணங்களையும் விட்டுச் செல்கிறேன்' என்று விடைபெறும்.
/
Profile Image for Gayathri (books_and_lits).
105 reviews1 follower
October 16, 2025
“கனிகளுக்குள் முழு மரத்தின் சாரமும் அடங்கியிருப்பதைபோல குழந்தைப்பருவத்தில்தான் நம் முழு வாழ்க்கையின் சாரமும் ஒளிந்திருக்கிறது.”என்ன ஒரு வியப்பூட்டும் விளக்கம்😱இந்த வரியை வாசிக்க வாசிக்க பல்வேறு பரிமாணங்கள் எழுகின்றன.குழந்தைப்பருவம் என்பது ஒவ்வொரு மனித உயிரின் வாழ்வில் எத்துணை இன்றியமையாதது,வளர்ந்துவிட்ட ஒவ்வொரு ஜீவனின் மிகச்சிறிய அசைவுக்கும்,அவர்களின் உளவியல் ஆதி முதல் அந்தி வரை கட்டமைக்கப்பட்டுள்ள விதத்திற்கும் எவ்வுளவு தூரம் அதன் தாக்கமுள்ளது என்றெல்லாம் இப்பொழுது படவரியின் “Reels” களிலும் வலையொளியின் காணொளிகளிலும் மாறி மாறி ஒவ்வொரு மருத்துவரும் அறிவித்தவண்ணமுள்ளனர்.இப்படி பக்கம் பக்கமாக பேசும்,விளக்கும் இளம்பிராயத்தின் முக்கியத்துவத்தை மேற்கண்ட ஒரே வரியில் இவ்வுளவு அபாரமாக விளக்கிவிட்டார்😱பற்றாக்குறைக்கு உவமை…அது அதை விட மிகச் சிறந்தது❤️‍🔥சிந்தித்துப்பார்க்கும் பொழுது கனிகளுக்குள் கொட்டைகளில் அந்த மரமேயல்லவா தூங்கிக்கொண்டிருக்கிறது!அடேயப்பா…ஆச்சரியம்!!அதிசயம்!!!பரவசம்!!!

பதினைந்து கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் ஒவ்வொரு கட்டுரையும் இப்படித்தான் மனதைத் தொட்டு முடிகின்றன. வாசிக்கும் முன்,தலைப்பை பார்த்தபொழுதே ஒவ்வொரு மாதமும் இதுவரை வாசித்த புத்தகங்களிலேயே இவரது பால்யத்தை பல இடங்களில் தொட்டு விட்டாரே இன்னும் ஒரு புத்தகம் முழுக்க எழுதியிருக்க என்ன இருக்கும் என்று முட்டாள்தனமான ஒரு கேள்வி எழுந்தது.ஒவ்வொரு கட்டுரையிலும் இவர் சிறுவயதில் இவர் வாசித்த கிராமத்திலும் படிப்பதற்காக சென்ற காஞ்சிபுர நகரத்திலும் இவரின் மன ஆழங்களில் படிந்துவிட்ட மனிதர்களையும் நிகழ்வுகளையும் இங்கு வார்த்தைகளால் நமக்கும் காட்டுகிறார்.பரிமளா அக்கா,பவழ நாட்டு இளவரசன்,அஞ்சு ரூபாய் டாக்டர்,கோவிந்தசாமி தாத்தா போன்றவர்கள் இப்பொழுது என் மனதிலும் படிந்துவிட்டார்கள்.

குழந்தைகள் சென்று கடவுளிடம் கேள்விகள் கேட்டதாம்!
“இசை என்றால் என்ன?”

Read more…

https://www.instagram.com/p/DP21aCwEy...
Profile Image for Subiksha  Bharathi .
12 reviews5 followers
June 30, 2021
பாலகாண்டம்- நா.முத்துக்குமார்

உறவுகளை தம் சின்னஞ்சிறு கதைகளுள் அடக்கி எதார்த்தமாக நமக்கு புரிய வைப்பதில் நா. முத்துக்குமாரை எவரும் மிஞ்சிட முடியாது.
தன் பாலகாண்டத்தில் ஏற்பட்ட நிகழ்வகளை வாழ்கை பயணத்தோடு பிணைத்து ஓர் அழகான பாதயை காட்டுகிறது நா. முத்துக்குமாரின் பாலகாண்டம்.
Profile Image for Vino Kumar Ponnu Krishnan.
86 reviews2 followers
July 19, 2021
"பால காண்டம் ஒரு நிதியைப் போன்றது.
தண்ணீர் வற்றி விட்டாலும் மணலுக்கடியில் அந்த நதி ஓடிக்கொண்டுதான் இருக்கும் !"

வாசிக்கும் போது எங்கோ என்னுடைய பாலிய வயதில் கடந்து வந்த அனுபவம்.
Profile Image for Sanjeev Duglas.
89 reviews3 followers
May 5, 2023
மிக எழிமையான எழுத்துக்களால் சிறுவயது ஞாபகங்களை கொண்டுவருகிறார் .நா.மு. வாசிக்க ஒரு விருப்பம் ஏற்படும் எழுத்து.
Displaying 1 - 13 of 13 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.