கோபம், ஆதங்கம், ஆற்றாமை போன்ற வலிமையான உணர்ச்சிகளின் வீச்சு கச்சிதமான படிமச்சிதறல்களாகத் தெறிக்கும் ஜாலம் இக்கவிதைகளில் காணக்கிடைக்கிறது. தொன்மத்தின் வாசம் உள்ளோடி நிற்கும் மொழி, சொல்தேர்வின் நேர்த்தியைக் காட்டுகிறது. பார்வையின் கூர்மை மொழியின் திண்மையாக வெளிப்படுவது பெருந் தேவியின் கவிதைகளின் சிறப்பென்று சொல்லலாம். பெண் மனத்தின் வலிமையான அம்சங்களை முன்னிறுத்துபவையாக இக்கவிதைகள் தோற்றம் கொள்கின்றன.
Complex emotions like angst, frustration and despair play magic in Perundevi’s poems. Her language is prolific and precise. Her sharp perspective and dense language are not contradicting; rather related. The strong threads of a women’s mind shine through her poems.
கவிஞர். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சமயம், பெண்ணியம், பண்பாட்டியல் ஆகிய துறைகள் சார்ந்து ஆய்வு செய்துவருகிறார். Journal of Asian Studies, Anthropological Quarterly போன்ற இதழ்களிலும் கல்வித்துறை சார்ந்த ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பு நூல்களிலும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. காலச்சுவடு, காலக்குறி ஆகிய தமிழ் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது வாசிப்பும் எழுத்தும் என்று நம்பும் பெருந்தேவி, சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம் ஆகியவற்றிலும் ஈடுபாடுகொண்டவர்.