ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவாளியைக் கண்டடைபவை அல்ல. இவை குற்றம் என்னும் புள்ளியில் தொடங்கி வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இழுத்துக்கொண்டு முன்னகர்ந்து வாழ்க்கையின் அறியப்படாத ஒரு இடத்தைச் சென்று தொடுகின்றன. மானுடனை துப்பறியும் கதைகள் என்று இவற்றைச் சொல்லமுடியும்
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
புத்தகம் : பத்து லட்சம் காலடிகள் எழுத்தாளர் : ஜெயமோகன் பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம் பக்கங்கள் : 246 நூலங்காடி: பனுவல் விலை : 330
🔆 இதுவரை படித்த கதைகள் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைகள் இவை. ஐந்து கதைகள் கொண்டது இந்த புத்தகம். ஔசேப்பச்சன் இந்த கதைகளை வரும் துப்பறியும் கதாபாத்திரம். உணவகம் ஒன்று நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு ஒரு கையில் சாராயமும், மறு கையில் பீப் -உம் சாப்பிட்டுக் கொண்டே, தான் சந்தித்த வழக்குகளில் அவர்களுக்கு இருந்த சவால்கள், திருப்பங்களையும் தனக்கே உரித்தான பானியில் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார் ஔசேப்பச்சன்.
🔆 ஐந்து கடைகளில் மிக அருமையாக இருந்த போதிலும் எனக்கு மிகப் பிடித்தமான இரு கதைகளை பற்றி சில வார்த்தைகள்.
🔆 முதல் கதை வேட்டு ஜானம்மா சிறிய அளவில் ஒரு உணவுக் கடையை நடத்தி வருகிறாள். அந்த கடையில் தான் ஔசேப்பச்சன் தனது நண்பர்களுடன் பீப் பொரியலை ருசி பார்த்துக் கொண்டிருந்தான். ஜானம்மாவும் அவளது அக்கா பார்வதியும் சிறுவயதிலேயே சர்க்கஸ்க்கு போய்விட, அவர்களின் அனுபவங்களும், அங்கிருந்து எப்படி வெளியே வந்தார்கள் என்பதுதான் கதை.
🔆 இரண்டாம் கதை கைமுக்கு சிவராஜ பிள்ளை நாகர்கோவில் கோர்ட் வாசலில் டைப் செய்பவர். அவருக்கு ஒரு மகன் இரு மகள்கள். மகன் பள்ளியில் நல்ல மதிப்பெண் பெறவை கல்லூரியில் சேர்த்து விட்டார். சில ஆண்டுகளிலே நல்ல வேலைக்கு செல்ல இவரும் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு போய்விட்டார். பின்பு தான் அவர் மகன் ஒரு திருடன் எனவும் கோடிக்கணக்கில் அவன் திருடியதும் தெரிய வந்தது. இவ்வளவு நாட்கள் மென்பொருள் துறையில் வேலை செய்து வருவது போல அவன் நாடகமாடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவன் என்ன ஆனான் என்பது கதை.
🔆 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - ஏழாவது புத்தகம் இது.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
Brilliant stories based on the central character Ouchepachchan, a nihilistic former police offer, these stories are memories that he shares form cases he had resolved. Exploring themes as varied as the continuation of mental illness and it's link to an event historical past, to the customs and traditions of Mapla muslims these stories are truly unique.
குற்றப்பின்னணியில் மனித மனங்களின் பகுத்தறியமுடியா ஆட்டங்களை இங்கே வைக்கிறார் ஜெமோ. அந்த சாஹிப் பாத்திரம் ஒரு பெரும் தரிசனம் எனில் சில நேரமே வரும் ராதாமணி மட்டும் சளைத்தவளா என்ன? மனித மனங்களின் உண்மை தரிசனத்தை நேரில் காணமுடியாமல்.... ஜெமோ வின் வரிகளில் கூறவேண்டுமாயின்.
இறுதிக் கதையான "கைமுக்கில்" வரும் சிவராஜ்பிள்ளையும் அவர் மகன் மஹேஷும் அடேங்கப்பா... கருணை என்ற மட்டமான ஒன்றை அளிப்பது பெரிது அல்ல, அதை வாங்குபவன் இடத்தில இருந்து அதை அணுகவேண்டும். அப்போது தெரியும் அது ஆன்மாவரை பாயும் கூர்வாள் என்று.
இறுதியில் அவன் கல்லூரி காலங்களை கூறும் பக்கங்களை வேதாளம் அறைந்தது போல் படித்து முடித்தேன். ஒரு நககக்கண் கூட பாக்கி இல்லாமல் நம் அனைத்து முகமூடிகளையும் வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டார் ஜெமோ.
எல்லோருமே திருடன் தான் சத்தியமாக எல்லோருமே திருடர்கள் தான்