நம் வாழ்வில் நடக்கும் சில சிறிய சம்பவங்கள்தான், பெரிய கதைகளுக்கு கருவாகிறது. பெங்களூரில் இருந்து ஐலாண்ட் எக்ஸ்பிரஸில் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன். இது நடந்தது 1970 ம் ஆண்டு. உட்கார மட்டும்தான் இருக்கை கிடைத்தது. அங்கே ஒரு வடநாட்டு குடும்பம், ஏதோ விசேஷத்துக்கு போய்விட்டு ஊர் திரும்பினார்கள் போல இருந்தது. புஷ்பாவை அங்கேதான் பார்த்தேன். நிஜமான அழகி. வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை, இல்லை, தெரியவில்லை. நான் கவிஞன் இல்லையே. புஷ்பாதான் என் கவனத்தை கவர்ந்தவள். அவள் சகோதரன் என்னிடம் வந்து பேசி அறிமுகம் செய்து கொண்டது நிஜம். என்னை அவன் சகோதரிகளுக்கு அறிமுகம் செய்து வைத்ததும், நிஜம். மற்ற எல்லாம் கற்பனையே. இதெல்லாம் இன்றைய சூழ்நிலையில் ந&#