செப்டம்பர் 2010 கண்மணி இதழில் ஜெயா பாபு எனும் என்னுடைய மற்றொரு பெயரில் வெளிவந்த என்னுடைய முதல் நாவல் இது. இடையில் குறுக்கிட்ட சில சூழ்நிலைகளால் எழுதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் 2016 இறுதியில் தான் ஆன்லைனில் எழுத தொடங்கினேன். அதன்பின் நடுநடுவே சின்ன சின்னப் ப்ரேக் எடுத்தவண்ணம் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.கிட்டத்தட்ட நான் மறந்துவிட்ட என் முதல் நாவலை வாசக தோழமை ஒருவர் முகநூலில் அறிமுகம் செய்யவும் தான், ‘ஆமா... இதை நாம இன்னும் டைப் செய்து கூட வைக்கலையே...’ என்று யோசித்து இப்பொழுது கிண்டிலில் வெளியிடுகிறேன்.காதல் வந்ததும்... தலைப்பிற்கேற்ற கதைக்கரு தான். நாயகியை பார்த்த நொடி முதலாக அவள் மேல் நம்பிக்கையற்று தன் வசதிக்கு அவளை ஆட்டிப்படைக்கும்