Jump to ratings and reviews
Rate this book

தனிமையின் புனைவுக்களியாட்டு

ஐந்து நெருப்பு [Aindhu Neruppu]

Rate this book
குற்றத்தைச் செய்யவைப்பது என்ன? தன்னை சமூக உறுப்பினன் என உணர்பவனே மனிதன். ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னை தனிமனிதனாக உணர்கிறது. தன் நலத்தை, தன் மகிழ்ச்சியை நாடுகிறது. சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறிச்செல்கிறது., அவ்வண்ணம் மீறிச்செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது. தன்னை வெளிப்படுத்திவிட்ட நிறைவு அது.

குற்றத்தின், தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை. அதனூடாக வெளிப்படும் மனித ஆழத்தை அறிந்துவிட முயல்பவை. ஆகவே மனித அகமீறல்களின் பல தருணங்கள் இந்த கதைகளில் உள்ளன. அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் குற்றங்கள். எத்தனை தொகுத்தாலும் மனிதன் முற்றாக தொகுக்கப்பட முடியாத தனித்தன்மை கொண்டவன் என்பதை இவை கண்டடைகின்றன
- ஜெயமோகன்

272 pages, Kindle Edition

Published June 23, 2021

2 people are currently reading
20 people want to read

About the author

Jeyamohan

211 books849 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
23 (58%)
4 stars
11 (28%)
3 stars
4 (10%)
2 stars
1 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
252 reviews33 followers
December 18, 2024
புத்தகம் : ஐந்து நெருப்பு
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம்
பக்கங்கள் : 255


🔆 10 கதைகளைக் கொண்டது இந்த புத்தகம். ஒரே உணர்வாக இல்லாமல் சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகளையும் பேசுகிறது இந்த புத்தகம்.

🔆 சிரோமணியின் வீட்டில் ஒரு திருட்டு சம்பவம். அவரும் அவர் மகன் ரத்தினமும் புகார் கொடுக்க வந்தார்கள். திருடிய நபர் யார் என தெரிந்து இருந்தாலும் சிரோமணி அவனைக் காட்டி கொடுக்கவில்லை. அந்த கதை தான் - பிறசண்டு.

🔆 முள்ளும் பனையும் மட்டும் விளையும் அந்த பூமியில். அந்த காட்டில் முள்ளை வெள்ளாமை செய்து கொண்டிருந்தனர். முத்து அந்த இடத்தில், அவன் அம்மா மற்றும் தங்கை உடன் வேலை செய்து கொண்டிருந்தான். அவன் அம்மா அவனை நல்ல வேலைக்காக பம்பாய்க்கு அனுப்ப நினைத்தாள். உதவி செய்வதாக கூறிய நபர் தற்கொலை செய்து கொண்டார். அந்த கதை தான் ஐந்து நெருப்பு.

🔆 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் இது பனிரெண்டாவது புத்தகம் .

புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
March 17, 2022
பத்து சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் பிறசண்டு, ஐந்து நெருப்பு, அறமென்ப, ஏழாம் கடல், கூர் ஆகிய ஐந்து கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
Profile Image for Sriram Mangaleswaran.
177 reviews3 followers
October 23, 2022
One of the best reads in recent time and the short story of ஐந்து நெருப்பு is the first 20 mins of Venthu Thaninthathu Kaadu.

All the stories are engaging and some stories are interconnected too.
Profile Image for Praveen (பிரவீண்) KR.
230 reviews33 followers
August 8, 2025
Detailed review @ https://kalaikoodam.blogspot.com/2025...

நெறியில் இருந்து விளக்குவதே குற்றத்தின் அடிப்படை ஆகும். அப்படிபட்ட குற்றங்களின் பின்புலங்களை கதைமாந்தர்களின் மனநிலையும் மய்யமாக வைத்து எழுதப்பட்ட இந்த கதைகள் கண்டிப்பாக படிக்கப்படவேண்டியவை.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.