”சாலையில் ஒருவன் சாதாரணமாக முந்திச் சென்றாலும் சட்டென்று அவனை எதிரியாக பாவிக்கிற அறிவு மூளைக்குள் நுழைந்திருக்கிறது. ஒருவருக்கொருவர் பகைவர்களாக நிறுத்தி வைத்து நிகழும் ஆடு புலி ஆட்டத்தின் கட்டங்களே துருவ ரேகைகளாக பூமி உருண்டை மீது படிந்து இருக்கின்றன. யாரையும் நம்ப முடியாத, நெருங்கி ஒட்டி விடாதபடிக்கு அன்றாட வாழ்க்கை மனிதர்களை விரட்டிக்கொண்டு இருக்கிறது. முன்பின் தெரியாத ஒரு மனிதனைப் பற்றி மனதிற்குள் முதலில் ஒலிப்பது அபாயச் சங்குதான். ஒரு புன்னகையை உதிர்ப்பதற்கான விசாலம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறோம்தனது அடையாளங்களை மனிதன் இப்போது பார்க்க முடிவது குழந்தைகளிடம்தான். குழந்தைகளை எல்லோரும் நேசித்துக் கொண்டு இருக்கிறோம்.
பூர்வீகம் திருச்செந்தூர் அருகே செங்குழி என்னும் சிற்றூர்.
இதுவரை இராஜகுமாரன் (மீனாட்சி புத்தக நிலையம்) , போதிநிலா (வம்சி பதிப்பகம்)என்னும் இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
சேகுவேரா (சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில்), காந்தி புன்னகைக்கிறார், ஆதலினால் காதல் செய்வீர், மனிதர்கள் நாடுகள் உலகங்கள், என்றென்றும் மார்க்ஸ் என்னும் Non-fiction நூல்கள் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
புத்தரைப் பார்த்தேன் என்னும் சொற்சித்திர தொகுப்பும், , உடைந்த முட்டையும் தலையெட்டிப் பார்த்த டைனசரும் என்னும் அரசியல் கட்டுரைகள் தொகுப்பும் அமேசானில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
பள்ளம், இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய மூன்று ஆவணப்படங்கள் இயக்கப்பட்டு இருக்கின்றன.
மண்குடம் என்னும் சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது.
இரவுகள் உடையும் ஆவணப்படம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஜான் ஆபிரகாம் தேசீய விருதுக்கான திரைப்பட விழாவில் பங்கு பெற்றது.