Jump to ratings and reviews
Rate this book

நீ இன்று இருந்தால்: மகாத்மா காந்தியைப் பற்றிய 2000 வரிகள் கொண்ட புதுக்கவிதை குறுங்காவியம்

Rate this book
‘நீ இன்று இருந்தால்’ குறுங்காவியத்தை நான் ஒரு வாழ்க்கை வரலாற்றுக் காவியமாக ஆக்க விரும்பவில்லை. ஆன்மிகத்தையும் அரசியலையும் பிணைத்து ஒரு தத்துவ அடிப்படையில் ஒரு தேசத்துக்கு, ஒரு சமுதாயத்துக்கு விமோசனம் ஏற்படச் செய்தது மட்டுமல்ல, மானிட ஜாதிக்கே விமோசனத்துக்கு உதாரணமாக இருந்து வழிகாட்டிய ஒரு மாமனிதனின் தேஜஸைக் காட்டுவதுதான் என் நோக்கம். அதோடு அந்த அவதார புருஷன் வாழ்ந்த அடிச்சுவடே இல்லாது போய்விடுமோ என்ற மனப் புழுக்கத்திடையே ஏக்கத்தை வெளியிடும் மனக்குரலும் பேசுகிறது.இந்த குறுங்காவியம் 1968 ல் மகாத்மா காந்தியின் சத ஆண்டுக்கு முந்தின ஆண்டில் எழுதப்பட்டது, ‘எழுத்து’வில் வெளியானது. இந்தக் கவிதை நெடுகிலும் அங்கங்கே சில தமிழ் கவிகளின் வரிகள

85 pages, Kindle Edition

Published October 1, 2021

4 people are currently reading

About the author

C.S. Chellappa

110 books61 followers
சி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
3 (50%)
3 stars
3 (50%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Rajesh Arumugam.
144 reviews3 followers
October 6, 2022
காந்தியத்தை பற்றி எளிதாய் அறிய, உணர, திரும்பி பார்க்க கவிதை/காவிய வடிவில் பழரசம் பிழிந்து கொடுத்து உள்ளா சி.சு.செல்லப்பா. மேலும், காந்தி இறந்த அன்று காந்தியமும் இறந்தது நாமும் காந்தியத்தை விட்டு வெகு விலகி விட்டோம் என்று அவர் கூறுவதை வாசிக்கையில் மனம் வேதனை அடைகிறது. இன்று சி.சு.செல்லப்பா எழுதினால் இன்று இருக்கும் மத அரசியல் அவல நிலையை முதலாளித்துவ சுரண்டல் மனப்பான்மை, இயற்கை சீர்கேடு போன்றவரை கண்ணீர் மல்க எழுதியிருப்பார். அடிக்கடி வாசித்து நம்மை நாம் சரி செய்துகொள்ள வேண்டிய காவியம். ஒரே ஆறுதல், இக்காவியத்தில் காந்தியில் சாம்பலில் இருந்து மலர்கள் மலரும் என்று சொல்லியிருக்கிறார். அது பொய்யில்லை. பல காந்தியர்கள் பின்பு பிறந்து இருக்கிறார்கள். பல ஆயிரம் காந்தியர்கள் அதுப்போல் மேலும் மேலும் ஆண்டுக்கு ஆண்டு நாளுக்கு நாள் பிறக்க வேண்டும்.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.