2012 ஆம் ஆண்டு மே மாதம் நடு; 'குமுதம் தீராநதி'யில் இருந்த இளைய நண்பர் தளவாய் சுந்தரம் அவர்களை செல்லில் அழைத்து அனுப்பி வைத்திருந்த கவிதைகளின் தெரிவு குறித்து விசாரித்துக்கொண்டிருந்த வேளை; "ஆசிரியரிடம் பேசுகிறீர்களா, உங்களைத் தொடர் எழுதச் சொல்கிறார்" எனக் கூறி இரா.மணிகண்டன் அவர்களிடம் கொடுத்தார்."சுயசரிதை எழுதுங்களேன்" என்றார் ஆசிரியர். அதுவும் தயக்கமாகத்தான் இருந்தது. கவிதையில், சிறுகதையில், கட்டுரையிலெல்லாம் நிரம்பச் சொல்லியிருக்கிறோம் என்று யோசனை; (என்றபோதும் சொல்வதற்கு இன்னும் விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன) தவிரவும், தொடர் எழுதுகிற வாழ்க்கைமுறையில் நான் இல்லை; எந்த நோக்கமுமின்றி ஊர் சுற்றித்திரிகிற இயல்பு, வெறுமையாக உணரும் சந்தரĮ
25.09.1947ல் பிறந்த கவிஞர் விக்ரமாதித்யனின் இயற்பெயர் நம்பிராஜன். தென்காசியில் வசிக்கும் இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. PUC படித்த இவர், மளிகைக்கடைப் பையன், சித்தாள், இட்லி-வடை விற்பவன், சலவை நிலைய எடுபிடி, மெத்தைக்கடைப் பையன், காயலான்கடை உதவியாள், ஓட்டல்-கிளீனர், கட்பீஸ் ஸ்டோர் பணியாள், சர்வர், குன்றக்குடி ஆதீன அட்டெண்டர், ஜலகன்னி-தம்போலா-வளையமெறிதல் ஸ்டால்களில் கேஷியர், சீட்டு-கிளப் கேஷியர், ஊர் ஊராய்ப் போய் புத்தக வியாபாரம், அச்சக உதவியாளர், பிழை திருத்துபவர், துணையாசிரியர், பொறுப்பாசிரியர் போன்ற பல தொழில்களைச் செய்திருக்கிறார். சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன், தளபதி ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறார். முழுநேர எழுத்தாளரான இவர், தமது மாணவப் பருவத்தில் 1964ல் எழுதத் தொடங்கினார். இவரது எழுத்து முதன்முதலில் சுதேச மித்திரன் மாணவர் இதழில் வெளியாயிற்று.
விளக்கு, மஹாகவி, சாரல் முதலான விருதுகளைப் பெற்ற இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.