Jump to ratings and reviews
Rate this book

எழுதித் தீராப் பக்கங்கள்

Rate this book
மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று - மண்ணின் மக்கள் வேரற்று அலைந்து புகலிடம் தேடியதுதான். காலூன்றிய நிலத்திலிருந்து பெயர்ந்து முற்றிலும் அந்நியமான இடங்களில் அவர்கள் தம்மை பதித்துக்கொண்டார்கள். அவ்வாறு நாட்டைவிட்டு வெளியேறிய ஈழத் தமிழர்களில் முதல் தலைமுறையின் பிரதிநிதிகளில் செல்வம் அருளானந்தமும் ஒருவர்.
ஈழத்திலிருந்து அகதியாக வெளியேறிய செல்வம் பாரீஸில் புகலிடம் தேடியவர். பின்னர் கனடாவில் புலம்பெயர்ந்தவரானார். இந்த மூன்று காலநிலைகளிலான தனது அனுபவங்களை மீள நினைவுகூர்வதே இந்த நூல். தன்னையும் தன்னைப் போன்ற வேர்பறிக்கப்பட்டவர்களின் பாடுகளையும் இந்த சுவிசேஷத்தில் வெளிப்படுத்துகிறார் செல்வம். நேற்றைய துயரங்களை இன்றைய வேடிக்கைகளாகப் பகிர்ந்துகொள்கிறார். நினைவுகளின் கசப்பையும் கண்ணீரின் உப்பையும் நகையுணர்வின் இனிப்போடு முன்வைக்கிறார். கூடவே யார் மீதும் பழிபோடாத செல்வத்தின் பேரிதயம் வேதனையைக் கடந்து மானுடத் தோழமையின் அமுதத்தைத் திரட்டி அளிக்கிறது. புனைவுகளை மிஞ்சிய ஈர்ப்பும் ஆவணங்களில் சிக்காத உண்மையின் வலுவும் ‘எழுதித் தீராப் பக்கங்க’ளை வரலாற்றின் மறுக்க முடியாத பக்கங்களாக்குகின்றன.

It is a tragedy that three decades of civil war in Sri Lanka uprooted hundreds of thousands of Tamils from their homeland and scattered them across the world. Selvam Arulanantham belongs to the first generation of uprooted Sri Lankan Tamil refugees who put down roots in totally strange lands.
He fled Sri Lanka and sought refuge in the French capital of Paris before moving to Canada. This collection includes his memories of growing up in his homeland, staying in France as a refugee and settling down in Canada. He brings into focus the miseries he and his fellow countrymen suffered throughout all these three phases based on his own experiences.
Past sufferings become current amusements in Selvam’s recollections. Unpleasant memories and tearful experiences are recalled with a pleasant sense of humour. The way they are portrayed with a heart of gold, without finger-pointing, reflects his sense of humanity and human solidarity.
The actual facts and figures not available in documents but found in Selvam’s writings assume the dimension of undeniable historical data which make this collection more appealing than a piece of fiction.

287 pages, Kindle Edition

Published August 1, 2021

3 people are currently reading
53 people want to read

About the author

’காலம்’ செல்வம் (செல்வம் அருளானந்தம்) (ஜூன் 30, 1953) கனடாவில் இருந்து வெளிவரும் காலம் என்னும் சிற்றிதழின் ஆசிரியர். ’வாழும்தமிழ்’ என்னும் இலக்கிய அமைப்பின் நிறுவனர். எழுத்தாளர். இலக்கியச்செயல்பாடுகளுடன் தெருக்கூத்திலும் ஈடுபாடு கொண்டவர்.

செல்வம் யாழ்ப்பாணம் சில்லாலையில் ஜூன் 30, 1953-ல் சவரிமுத்து - திரேசம்மாவுக்கு பிறந்தார். சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் புனித ஹென்றி கல்லூரி (St. Henry’s College) இளவாலையில் பட்டப்படிப்பையும் புனித அகஸ்டின் பிரெஞ்சு மொழி பள்ளியில் (St. Augustine French Language School Paris, France) ல் பிரெஞ்சு மொழியும் மருத்துவத் தாதிக்கான பட்டயப்படிப்பு (Diploma from St. Daniel College Toronto) கனடாவிலும் முடித்தார்.

செல்வம் 1975-ல் நான் என்னும் இதழில் தன் முதல் கவிதையை எழுதினார். ஜெயகாந்தன், எஸ். பொன்னுத்துரை, சுந்தர ராமசாமி, ஜானகிராமன் ஆகியோரை இலக்கிய முன்னோடிகளாக கருதுகிறார். செல்வம் தொடக்கத்தில் கவிதைகள் எழுதினார். பின்னர் நீண்டகாலம் ஏதும் எழுதவில்லை. அவருடைய அகதிவாழ்க்கையைப் பற்றி எழுதிய எழுதித்தீரா பக்கங்கள் என்னும் நூல் அதன் இயல்பான நகைச்சுவையால் புகழ்பெற்றது. தொடர்ந்து அதன் அடுத்த பகுதியான சொற்களில் சுழலும் உலகம் நூலையும் எழுதினார்.

புலம்பெயர் வாழ்க்கையில் இரண்டு சிற்றிதழ்களை நடத்தினார். குமார் மூர்த்தி என்னும் நண்பருடன் இணைந்து அவர் தொடங்கிய காலம் சிற்றிதழ் முப்பதாண்டுகளாக கனடா டொரொண்டோ நகரில் இருந்து வெளிவருகிறது. ஈழத்து இலக்கியவாதிகளுக்கும் தமிழ் இலக்கியவாதிகளுக்கும் காலம் வெளியிட்ட சிறப்பிதழ்கள் இலக்கிய ஆவணங்களாகும்.

பார்வை சஞ்சிகை (1987-1989) (ஆசிரியர்) (Montreal, Canada)
காலம் சஞ்சிகை (1990 - Present) (Toronto)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
12 (63%)
4 stars
4 (21%)
3 stars
1 (5%)
2 stars
1 (5%)
1 star
1 (5%)
Displaying 1 of 1 review
Profile Image for Canute Aravintharaj Denicius .
23 reviews5 followers
October 17, 2021
யாழ்ப்பாணத் தமிழிலே புலம்பெயர் அனுபவங்களை ஓர் அங்கதச் சுவையுடன் சொல்லும் அருமையான நூல். வழமையாக நாவல்களாக இல்லாத புத்தகங்கள் ஓர் அளவுக்கு மேல் தொடராக வாசிக்கும்போது சுவாரசியத்தை இழந்துவிடும்.

அதற்கு மாறாக இந்தப்புத்தகமோ இறுதி ஒற்றை வரை சிரித்து சிரித்து வாசிக்க வைக்கிறது. ஆனால் யோசிக்கும்போது அவ் வரிகளுக்குள் மறைந்திருக்கும் சோகம் மனதை உறுத்துகிறது.

புலம்பெயர் வாழ்வை அனுபவிக்காது விட்டாலும் புலமைப் பரிசிலில் போய் அதை வாழ்ந்த மற்றும் வாழ்கின்ற நண்பர்களுடன் இருந்தவன் என்ற ரீதியில் இந்தப் புத்தகம் நெருக்கமாக இருந்தது.

தமிழன் ஊரில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் போய் என்னென்ன செய்துள்ளான் என்பதை சிரிக்கச் சிரிக்க அறிய அனைவருக்கும் பரிந்துரைக்கின்றேன்.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.