சம்பளம், போனஸ், பஞ்சப்படி என வறண்ட பிரதேசங்களில் அமைந்துகொண்டிருப்பதல்ல தொழிற்சங்க இயக்கம். அன்பும், கருணையும், நட்பும், தோழமையும், புயலும், தென்றலும் வீசுகிற வண்ணப் பூங்காடு அது என தொழிற்சங்க இயக்கத்தின் உயிர்துடிப்பு மிக்க பக்கங்களாக விரிகிறது இந்நூல்.