Jump to ratings and reviews
Rate this book

உங்களை உற்றுப் பார்க்கும் மலைப்பாம்பு

Rate this book
இந்திய பாசிசம் மக்களிடம் அவநம்பிக்கைகளை விதைத்துக்கொண்டே இருக்கிறது. அருகில் இருப்பவர்களையே நம்ப முடியாத சூழலை ஏற்படுத்துகிறது. வேறு வழியில்லை என்னும் நிலைமைக்குத் தள்ளுகிறது. இந்த உளவியலை பயன்படுத்தி, ‘ஒரு தலை, பல கால்கள்’ என்பதை ஏற்க வைக்கிறது. அதாவது ஒரு தலை. அதுதான் சிந்திக்கும். பேசும். ஆணையிடும். கால்கள் அனைத்தும் ஒன்று போல அதற்கு கட்டுப்பட்டு நடக்கும். கூடவே நடக்கும் கால்களோடு தன் கால்களும் இருக்கின்றன என்பது எதொவொரு விதத்தில் மனிதனுக்கு நம்பிக்கையளிக்கிறது என்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் எரிக் ஹோப்ஸ்வாம்.

இந்த ஆறு ஆண்டுகளும் தொடர்ந்து மக்களை ஒரு பதற்றத்திலேயே வைத்திருக்கிறது அரசு. மக்களை கீழ்படிய பழக்குவது பாசிசத்தின் தன்மை. அது ‘லெப்ட்’, ‘ரைட்’ என்று உத்த்ரவிட்டுக்கொண்டே இருக்கிறது. அது நில் என்றால் அனைவரும் நிற்க வேண்டும். உட்கார் என்றால் அனைவரும் உட்கார வேண்டும். ஓடு என்றால் அனைவரும் ஓட வேண்டும். வரிசையில் போய் நில் என்றால் நிற்க வேண்டும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்களை ஓட வைத்தது. வரிசையில் போய் நிற்க வைத்தது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது தோல்வி என்றும், மக்கள் விரோதமானது என்றும், கருப்புப் பணத்தை பிடிக்கவில்லை என்றும் நாம் பேசுகிறோம். இன்னொரு பக்கம் அரசு சாதித்தது என்னவென்றால் இந்த மக்களை கீழ்படிய வைத்தது. அரசு சொல்கிற படி கேட்க வைத்தது. ஜி.எஸ்.டி, ஆதார் என எதாவது சொல்லி மக்களை அலைக்கழிக்க வைத்தது. எதாவது ஒரு பயிற்சியைத் தொடர்ந்து கொடுத்து ஒரு பதற்றத்தில் மக்களை வைத்துக்கொண்டே இருக்கிறது.

வரலாற்றின் இருண்ட தருணங்களை கடப்பதற்கான வெளிச்சத்தை வரலாற்றிலிருந்தே பெற முடிகிறது. அவநம்பிக்கையிலிருந்து மீட்டு நம்பிக்கைகளை ஊட்டவும் வரலாற்றால் சாத்தியமாகிறது. அதைத்தான் இந்த புத்தகம் பேசுகிறது.

59 pages, Kindle Edition

First published November 15, 2021

1 person want to read

About the author

Mathavaraj

13 books3 followers
பூர்வீகம் திருச்செந்தூர் அருகே செங்குழி என்னும் சிற்றூர்.

இதுவரை இராஜகுமாரன் (மீனாட்சி புத்தக நிலையம்) , போதிநிலா (வம்சி பதிப்பகம்)என்னும் இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.

சேகுவேரா (சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில்), காந்தி புன்னகைக்கிறார், ஆதலினால் காதல் செய்வீர், மனிதர்கள் நாடுகள் உலகங்கள், என்றென்றும் மார்க்ஸ் என்னும் Non-fiction நூல்கள் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

புத்தரைப் பார்த்தேன் என்னும் சொற்சித்திர தொகுப்பும், , உடைந்த முட்டையும் தலையெட்டிப் பார்த்த டைனசரும் என்னும் அரசியல் கட்டுரைகள் தொகுப்பும் அமேசானில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

பள்ளம், இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய மூன்று ஆவணப்படங்கள் இயக்கப்பட்டு இருக்கின்றன.

மண்குடம் என்னும் சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது.

இரவுகள் உடையும் ஆவணப்படம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஜான் ஆபிரகாம் தேசீய விருதுக்கான திரைப்பட விழாவில் பங்கு பெற்றது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.