Jump to ratings and reviews
Rate this book

நாற்காலி: கி.ரா. 40 சிறுகதைகள்

Rate this book
இந்த மின்னூலில் கி.ரா. வின் நாற்காலி, கதவு, வேட்டி, நிலை நிறுத்தல், கோமதி போன்ற 40 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.“எனது ஊரையும் என் மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின்மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து அழுததும் இந்த மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரி, வாரிப் போட்டுக் கொண்டும், என் கூட்டாளிகளின் தலையில் வாரி இறைத்தும் ஆனந்தப்பட்டிருக்கிறேன். இந்த கரிசல் மண்ணை நான் ருசித்துத் தின்றதற்கு என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடிவாங்கியிருக்கிறேன். இன்றைக்கும் எனக்குத் தெவிட்டவில்லை.” - கி.ராஜநாராயணன்

315 pages, Kindle Edition

Published July 11, 2021

84 people are currently reading
38 people want to read

About the author

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

Ki. Rajanarayanan (Ki. Ra for short) was born in Idaiseval village in 1923. He dropped out of school in the seventh standard. He was appointed a professor of folklore at Pondicherry University in the 1980s. He held the title of Director of Folktales in the university's Documentation and Survey Centre. He was a member of the Communist Party of India and went to prison twice for his participation and support in the CPI organised peasant rebellions during 1947–51. In 1998-2002 he was a General council & Advisory board Member of Sahitya Akademi.

Ki. Ra.'s first published short story was Mayamaan (lit. The Magical Deer), which came out in 1958. It was an immediate success. Ki. Ra.'s stories are usually based in Karisal kaadu (scorched, drought stricken land around Kovilpatti ). He centres his stories around Karisal country's people, their lives, beliefs, struggles and folklore. The novels Gopalla Grammam (lit. Gopalla Village) and its sequel Gopallapurathu Makkal (lit. The People of Gopallapuram) are among his most acclaimed; he won the Sahitya Akademi award for the latter in 1991. Gopallapuram novels deals with the stories of people living in a South Indian village before the arrival of the British. It involves the migration of people escaping brutal kingdoms north of Tamil Nadu. As a folklorist, Ki. Ra. spent decades collecting folktales from the Karisal Kaadu and publishing them in popular magazines. In 2007, the Thanjavur based publishing house Annam compiled these folktales into a 944-page book, the Nattuppura Kadhai Kalanjiyam (Collection of Country Tales). As of 2009, he has published around 30 books. A selection of these were translated into English by Pritham K. Chakravarthy and published in 2009 as Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu. Ki. Ra. is well known for his candid treatment of sexual topics, and use of the spoken dialect of Tamil language for his stories (rather than its formal written form). In 2003, his short story Kidai was made into a Tamil film titled Oruthi. It was screened in the International Film Festival of India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
33 (49%)
4 stars
19 (28%)
3 stars
9 (13%)
2 stars
3 (4%)
1 star
3 (4%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Premanand Velu.
241 reviews40 followers
September 3, 2021
90களின் இறுதியில் தில்லியில் இருந்து வேலையாக, வடநாடு முழுதும், பயணமாகும் போது, என்னுடன் கூடவே பயணம் செய்யும் புத்தகங்களில் முதன்மையானது கி.ரா.வின் சிறுகதைகளே... மொழியறியா தேசங்களில், முகமறியா மனிதர்களுடன், புதுப்புது நிலப்பரப்புகளிலும் கூட, என்னோடு வசித்து, என் வேர்களுக்கு நீர் வார்த்தவை அவர் மொழியும், அது உயிர்ப்புடன் வைத்திருந்த அந்த கரிசல் மனிதர்களுமே...

அந்த அபிமானம் எனக்கு என்றுமே அவர் எழுத்துக்களுக்கு உண்டு... பிறகொரு காலத்தில் அவர் புதுவைக்கு நகர்ந்த பின் அவர் எழுத்துக்கள், குறிப்பாக சிறுகதைகள், மாற்றத்திற்கு உள்ளான போது, அந்த நெருக்கம் சற்றே நெகிழ்ந்த போதும், ஒரு முறை பழகிய அந்த கரிசல் மணம் மாறவே இல்லை. தொடர்ந்து அவர் எழுத்தில் அந்த மணத்தை உலகத்தின் வேறு வேறு பகுதிகளில் இருந்த போதும், அனுபவிப்பதும் சற்றும் குறையவில்லை.

அந்த வகையில், அவர் சிறுகதை தொகுதி ஒன்று கிண்டிலில் புதிதாக வந்தபோது, உடனே வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அவர் இலக்கிய வாழ்வின் நெடிய பரப்பில் படைத்து, வேறு வேறு கால கட்டங்களில் வந்த தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்த 40 சிறுகதைகள் இந்தத் தொகுதியில் படிக்கக் கிடைக்கிறது. அவர் ஆரம்ப காலத்தில் படைத்த, பழம் மணிக்கொடி எழுத்து நடையில் வந்த கதைகளில் தொடங்கி, கோபல்ல கிராம கட்டம் தொட்டு, அவர் புதுவையில் இருந்த போது எழுதியவை சேர்த்து, வயது வந்தவர்களுக்கு என்ற தொகுதியில் முற்றுப் பெறுகிறது.
அப்படி சேர்த்த அனைத்துமே எனக்கு பிடித்தவை என்று கூற முடியாது. என் கருத்தில் முக்கியமானவை என்று தோண்டியவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.

1. வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும்
புதையல் மீது மனிதர்களுக்கு உள்ள மோகமும், அது உறவுகளுக்குள் ஏற்படுத்தும் விளைவுகளும், அதன் நிலையற்ற தன்மையையும், மெல்லிய கிராமிய நகைச்சுவை இழையோட (Dark Comedy) சொல்லும் நுட்பம் தனியாக அவர் முத்திரையை பதிக்கிறது.

2. அவுரி
கிராமிய விவசாய தற்கால வாழ்வில் இருக்கும் பிரச்சினையை படம் பிடித்துக் காட்டும் சிறுகதை இது... பிரச்சினைகளைப்ப பேசுவதால் வறட்சியான கதையல்ல இது...

"அது ரொம்பச் சொகமான உழவு. கலப்பை பூமியிலெ முங்கி இருபுறமும் பொங்கி ‘மகுந்து’ விமுகிற அந்தக் கரிசல் மண்ணைப் பாத்துக்கொண்டே இருக்கலாம். அப்படி உழவு அமையிறதே அபூர்வம். உழவு பிடிக்கிறவனுக்கும் சந்தோஷம், மாடுகள்கூட உடம்பில் பிடிக்காமல் அசை போட்டுக்கொண்டே நடக்கும்!"

என்ற வரிகளில், ஒரு விவசாயி அனுபவிக்கும் சந்தோசத்தை, வாசிக்கும் நமக்கு மாற்றும் வித்தையை நிகழ்த்துகிறார்.

"விவசாயங்கிற தொழில், அதிலும் கரிசல்காட்டு விவசாயங்கிற ஒரு தொழில் அழிஞ்சிக்கிட்டு வருது வேகமா. இது யார் கண்ணுலேயும் பட்டதாகத் தெரியலையே ஒரு தச்சாசாரி ஒரு நாக்காலி செய்தா, மரம் வாங்கின விலை, அவனோட உடல் உழைப்புக்கான கூலி இதை வச்சி ஒரு விலை சொல்வான். விலையைக் குறைச்சிக் கேட்டா கட்டாதுன்னு சொல்லிவிடுவான். சம்சாரியாலெ ஏன் அப்படிச் சொல்லமுடியலெ? செஞ்ச செலவுகளுக்கும் குறைச்சில்லெ பொருளை விக்க வேண்டியதிருக்கு. இந்த அநியாயத்துக்கு எப்பொ ஒரு முடிவு வரும்." என்ற வரிகளில், விவசாயிகளின் பிரச்சினையான தொழில் சமன்பாடு குறைபாட்டை ( unequal Terms of trade ) உரத்த குரலில் உரைக்கிறார்.

3. நிலை நிறுத்தல்
4.கதவு
5.நாற்காலி

இவை மூன்றுமே கிட்டத்தட்ட சாகாவரம் பெற்றவையாய் நிலைத்துவிட்டவை... ஏழ்மையையும், சாதிய ஏற்ற தாழ்வுகளையும், கிராமிய மனிதர்களின் துயரங்கள், அவர்களுக்கு உள்ளே ஊற்றெடுக்கும் ஈரம் ஆகியவற்றை எள்ளலோடும் உருக்கத்தோடும் படம்பிடித்து காட்டுபவை.

6.சிநேகம்
தொலைந்து போன சிறுவயது நடிப்பின் ஏக்கத்தை, அதன் சேர முடியாத வலியை மனதோடு ஒட்டவைக்கும் மந்திரம் இது. கதையில் வரும் ராமிக்கும், ராஜாவுக்கும் அல்ல, வாசிக்கும் அனைவருக்கும் இருக்கும் வலி தான்.

"ராஜா தன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது ராமிக்குத் தெரியும்; தன்னைப் பார்க்கவே வந்திருக்கிறான் என்பதும் ராமிக்குத் தெரியும். ஆனாலும், அவள் ராஜாவின் பக்கம் பார்க்கவே இல்லை.

என்ன காரணம் என்று தெரியவில்லை; பக்கத்திலிருப்பவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று பயந்து, கண்களைத் துடைத்துக் கொள்ளும்போது, கீழ்க்கண்டவாறு சொன்னான் ‘சை’ கண்ணில் தூசி விழுந்துவிட்டது. அவன் கண்களைத் துடைத்துக்கொண்டதையோ அவன் அப்படிச் சொன்னதையோ அங்கு உண்மையில் யாரும் பார்க்கவுமில்லை; அதைக் கேட்கவும் இல்லை!"



7. இல்லாள்
பிறந்த வீட்டின் சம்மதமின்றி புகுந்த வீட்டுக்கு வந்து, அதனால், இரு வீட்டுக்கும் ஏற்பட்ட பகையால் வலியை தனித்து அனுபவிக்கும் ஒரு பெண்ணின் வேதனை. மரணம் கூட இணைத்து வைக்க முடியாத வேதனை... இந்தக் கதை எனக்கு மிக நெகிழ்வானது...

8.புவனம்
கைகூடாத, மெல்லிய, காதலா நட்பா என்று இனம்பிரிக்க முடியாத, படர்ந்து விலகிய உணர்வின் ஏக்கத்தை கூறும் கதை. சரி, தவறுகளைத் தாண்டி, வாசிக்கும் நமக்கு ஒரு வித மென்சோகம் வழிவது தவிர்க்க முடிவதில்லை.

9.வேலை... வேலையே வாழ்க்கை
உண்மையில், மிக நுணுக்கமான இலக்கியம் என்று கூற வேண்டிய சிறுகதை இது....

"கெங்கம்மா படுக்கையில் இல்லை; படுக்கையின் கதகதப்பு ஆறி ஜில்லிட்டிருந்தது. அவள் மாடுகளுக்குக் கூளம் போட்டுவிட்டு இன்னேரமெல்லாம் முற்றும் தெளித்து சாணிப்பால் கரைத்துக் கொண்டிருப்பாள். நாகையா புரண்டு படுத்தார். அடித்துப் போட்டதுபோல் மேலெல்லாம் ஒரு அசதி போர்த்திக்கொண்டிருந்தது."

"பால் மாட்டுக்கு மட்டும்  தண்ணீர் காட்ட அவருக்குப் பொறுமை இருப்பதில்லை; அதை அவள்தான் காட்டி அடைக்கணும் . கெங்கம்மா, பால்மாட்டுக்கு 'ஒரு அஞ்சலில்' தண்ணீர் காட்டி விடுவாள். 'பசுமாடுகளே ரொம்ப நுட்பமுடையதுகள்'. நம்முடைய ஆத்திரப்படுதல், பொறுமையின்மை இதைகளை எப்படியோ தெரிந்துகொண்டு விடுகின்றன!  நிச்சயம் இவைகளுக்கெல்லாம் அவை பணிந்து போவதில்லை."

"எல்லா குழந்தைகளும் வாங்கித் திங்க பருத்தி கொடுத்தனுப்பினாள். குத்துக்காலிட்டு முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த புருஷனின் முதுகுப்புறமாக அருகே வந்து உட்கார்ந்துகொண்டு, குழந்தைக்குப் பால் கொடுத்தாள். நாகையாவின் மௌனம் அவளுள் புன்னகையை வரவழைத்தது. மெதுவாக புருஷனின் முதுகின் மேல் ஒருக்களித்துச் சாய்ந்துகொண்டு திரும்பி, அவருடைய முகத்தைப் பார்த்து சிரித்தாள். பதிலுக்கு அவர் நறுக்கென்று அவளை ஒரு கிள்ளு கிள்ளி வைத்தார். வலியால் முகத்தைச் சுளித்துக்கொண்டு அவளுடைய புஜத்தைப் பிடித்து தள்ளினாள். அவர் லம்பி, கிழே சாயாமல் கையை ஊன்றிக்கொண்டார். தாயார் தகப்பனாருக்கு இடையில் நடக்கும் இந்த விளையாட்டை என்ன என்று தெரியாமல், காம்பிலிருந்து முகத்தைத் திருப்பி அதுசயத்தோடு அவர்களைப் பார்த்தபோது, குழந்தையின் தோளின் மேல் பால் சொட்டியது."


இந்த வரிகளில் தொக்கி நிற்கும் அழகியல், அவரின் வேறு கதைகளில் எளிதாக காணாத ஒன்று... இந்தத் தொகுதியிலேயே சிறந்த கதை இதுதான் என்று எளிதாக அடித்துக்கூற முடியும்.

இந்தத் தொகுதியின் இறுதி பகுதி, அவரின் வயது வந்தவர்களுக்கான கதை தொகுதியைச் சேர்ந்தது... ஆபாசமின்றி, வி��ிம்பில் நின்றும் , வெளிப்படையான வார்ததைகளிலும், இலை மறைக்காயான அர்த்தங்களுடனும், ஊசலாடும் கதைகள்.

மொத்தத்தில், பரவலான ரசனைகளை திருப்திப்படுத்தும் தொகுப்பு.... அவற்றில் கரிசல் மண் வாசம் கொண்ட கதைகள் மாத்திரம், ஒரு பழக்கப்பட்ட கள் போல தனியாக மயக்கி இருப்பதை மறுக்க முடியாது.
57 reviews5 followers
November 17, 2024
கரிசல் காட்டு கதைகள் படிக்க வேண்டும் என்ற வெகு நாளைய ஆசை. கி ரா உடைய எழுத்துக்களை முதன் முறையாக படிக்கிறேன்.
சாகித்ய அகாடமி விருது பெற்றவர், அதிகம் படிக்கவில்லை என்றாலும் கிராமத்து மக்கள் வாழ்வை கதைகளின் மூலம் உயிரோடத்துடன் சொல்ல கூடியவர், விவசாயிலிருந்து எழுத்தாளனாக வளர்ந்தவர் என்ற பல பெருமைகள்.

நாற்பது கதைகளில் கடைசி நான்கு கதைகள் தவிர , எல்லாவற்றிலும் மண்ணின் மணம். வழக்கமில்லாத மொழியானதால் சில கதைகளை படிப்பதற்குள் பெரும் பாடாகிவிட்டது. பல கதைகள் யதார்த்தமானவையாக ஒரு முடிவின்றி இருந்தன. ஆசிரியரின் குறும்பு வெளிபடும் சில கதைகள்.

கோபல்லபுர கிராமம் படித்த பிறகு மற்றொரு கி ரா புத்தகம் படிப்பேனா என்பது சந்தேகம் தான்.

Profile Image for Sangamithra.
58 reviews26 followers
April 27, 2022
💫கி.ரா அவர்களின் 40 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எளிமையான நடை. பெரும்பாலும் திரும்பத் திரும்ப படிக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. படிக்கையில் நிச்சயம் நிறைய தடவை குறுநகை செய்யவேண்டியிருக்கும். நகைச்சுவைக்காக தனியாக மெனக்கெட்டு எழுதப்பட்ட வரிகள் போல் அல்லாமல் கதையோடு கதையாக வரும் வார்த்தைகள் புன்சிரிப்பை உண்டாக்குகின்றன. பெரும்பாலான கதைகள் கிராமத்தை மையமிட்டே உள்ளன. ஐந்தாறு கதைகள் 18+ ஆகவும் இருக்கும்.

💫சிநேகம், இல்லாள், வேட்டி, நாற்காலி, வேலை…வேலையே வாழ்க்கை இவையே என் நினைவில் நின்ற சிறுகதைகள்.

💫சிநேகம்:
திருமணத்திற்குப் பிறகு சிறுவயது தோழனிடமோ/தோழியிடமோ எப்போதும் போல பேச ஏதோ ஒரு மனத்தடை வந்துவிடுகிறது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்க வேண்டியதாக உள்ளது – என்பது மாதிரியான உணர்வுகளே இக்கதையில் காட்டப்படும். கதாநாயகனால் கடைசிவரையில் தன் சிறுவயது தோழியிடம் பேச முடியாமல் போய்விடும். கடைசியில் அவன் அழுவதாகவும், சுற்றி இருந்தவர்கள் அதை கவனிக்கவில்லை என்றும் கதையை முடித்திருப்பார். ஒருவேளை அவன், அவனது தோழியிடம் பேசி இருந்தாலும் கூட சுற்றியிருந்தவர்கள் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதையே ஆசிரியர் மறைமுகமாக சொல்ல வருகிறார் என நினைக்கிறேன்.

“வானத்தில் புறாக்கள் இஷ்டப்படி ஜோடி சேர்ந்து பேசிப் பறந்துகொண்டு போயின”

ஏதோ இயற்கையை வர்ணித்துள்ளார் என்றே நினைத்தேன். ஆனால் இரண்டாவது முறை வாசிக்கும் போதுதான் புலப்பட்டது – இக்கதைக்கும் இவ் வரிகளுக்கும் உள்ள பொருத்தம்.

💫இல்லாள்:
சிறு வருத்தத்துடன் படித்த கதைகள் பல உண்டு. ஆனால் அழுது படித்த கதைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இல்லாள் சிறுகதையும் அவற்றுள் ஒன்று. குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாற்றாக திருமணம் செய்யும் கதாநாயகி – தாயின் மறைவிற்கு கூட செல்ல முடியாத நிலை – கதையின் கடைசி பத்தியிற்கு முன்வரை இதுவே கதைக்களம் போலத் தோன்றும். ஆனால் கடைசி பத்தியில் – பிறந்த வீடு புகுந்த வீடு என எதிலும் அவளுக்கு என யாரும் இல்லை என்பது போல எழுதி இருப்பார். அந்த கடைசி பத்தியைப் படிக்கும்போது படிப்பவரின் மனதில் அவரது மனநிலை/சூழ்நிலையைப் பொருத்து ஆசிரியர் சொல்லாமல் சொல்லிச் சென்ற கதை வளர்ந்து கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.

💫வேட்டி:
என்னைப் பொருத்தவரையில் ஆடைகளின் மீது ஈர்ப்பு இருப்பதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அது ஒரு பாலினத்தோடு மட்டும் தொடர்புபடுத்தப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. பெரும்பாலும் பெண்களே ஆடைகளின் மீது விருப்பம் உடையவர்கள் போலவும், நேரம் எடுத்து பராமரிப்பவர்கள் போலவும் சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால் இக்கதையில் ஆண்கள் எப்படி வேட்டியைத் தேர்ந்தெடுக்கிறார்கள், எப்படி பராமரிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லியிருப்பார். இதுவே எனக்கு இந்தக் கதை பிடித்ததற்கு காரணம்.

💫வேலை…வேலையே வாழ்க்கை: கிராமத்தில் வாழும் ஒரு குடும்பத் தலைவியின் ஒரு நாள் வேலை இக்கதையில் சொல்லப்பட்டிருக்கும். படிக்கப் படிக்க நானே இந்த வேலைகளைச் செய்து களைப்புற்றது போல ஒரு மனநிலை வந்துவிட்டது. நிச்சயம் இக்கதையை வாசிக்கும் போது உங்களுக்கு ஒருவர் ஞாபகம் வருவார். பெரும்பாலும் அது அவரவர் அம்மாவாக இருக்கும்.
Profile Image for Prabhu R..
Author 3 books34 followers
October 27, 2021
A nice collection of short stories, some of them bring the nativity in front of the eyes of the reader. Sone end abruptly, but overall a nice read.
5 reviews
November 25, 2022
அருமையான சிறுகதை தொகுப்பு

315 pages yet really interesting, initially more Stories about society then fun and 18+ , all mix so you can enjoy
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.