தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க என்ன காரணம்? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? தலைசிறந்த நாடாக இருப்பதற்கான எல்லாவிதமான காரணங்கள் இருந்தும் கூட, சில நாடுகள் மட்டும் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போனது ஏன்?இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக் கும் விடைகாணும் முயற்சியாக, உலக வரைபடத்திலிருந்து காணாமல் போன சில தேசங்களின் வரலாற்றையும், உலகின் ஆச்சர்யமான சில தேசங்களின் வரலாற்றையும் பல நூல்களின் வாயிலாக அறிந்து, ஆராய்ந்து தெரிந்து கொண்டதன் மூலமாக உருவானதே காணாமல் போன தேசங்கள் என்கிற இப்புத்தகம்.
நிர்மல் நிர்மல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் எனும் ஊருக்கு அருகில் இருக்கும் திருவழுதிவிளை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். வாசிப்பு, இசை, விளையாட்டு, அறிவியல், அரசியல் மற்றும் பறை வாசித்தலில் ஈடுபாடு கொண்டவர். வேதியல் பட்டதாரியான இவர், தற்பொழுது கத்தார் தேசத்தில் பெட்ரோகெமிக்கல் துறையில் வேலை செய்து வருகிறார். தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த மேற்படிப்பையும் முடித்தவர்.
"ஸ்மார்ட் உலகத்துக் கதைகள்", "காணாமல் போன தேசங்கள்", “நிலமும் பொழுதும்” ஆகிய புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
யூகோஸ்லேவியா, செக்கஸ்லோவோக்கியா, சோமாலியா, போஸ்ட்வானா, எஸ்தோனியா போன்ற பெரும்பாலும் அதிகம் அறிந்திடாத நாடுகளின் அரசியல், சமூக வரலாறு இந்நூலில் மிகச்சுருக்கமாக மிக எளிமையான எழுத்து நடையில் எழுதப்பட்டிருக்கிறது. உலக வரலாற்றில் ஆர்வமுள்ளோருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது.