Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.
Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.
பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.
அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.
இக்கட்டுரையானது பேராசிரியர் தொ. பரமசிவன் ஐயா அவர்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2000-ஆம் ஆண்டில் நிகழ்த்திய சொற்பொழிவின் உரையாகும். தமிழ் ஆசிரியர்களின் வருகை, அவர்தம்படைப்புகள், அப்படைப்புகள் சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்படுத்திய தாக்கங்களைக் கால வரிசையில் நாம் அறிய முடிகிறது இந்த உரை வாயிலாக.
சுமார் 150 ஆண்டுகள் வயது கொண்ட தமிழ் ஆராய்ச்சி வரலாறு எங்கிருந்து உற்றெடுத்தது என்பது தொடங்கி, காலப்போக்கில் அது அடைந்த வளர்ச்சி, மற்றும் இப்பொழுது எந்த நிலைக்கு வந்தடைந்திருக்கிறது என்பதனை விளக்கும் ஒரு அற்புதமான உரை. தமிழாராய்ச்சியை மொழியாராய்ச்சியின் வரலாறாகக் கொள்ளாமல், கால வரிசையில் இலக்கிய இலக்கணக் கொள்கைகள், புலவர்கள், புரவலர்களின் குறிப்புக்கள் போன்ற தக்கப் பரிசீலனைகளோடும் மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வு நிலை என்ற தற்காலப் பண்பு நிலையின் வழியாகவும் தமிழாராய்ச்சியை வரையறை செய்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிடுகிறார் தொ.ப.
ஆராய்ச்சி என்பது ஒரு கருவின் மீது ஆராய்ச்சியாளருக்கு இருக்கும் திடமான நோக்கத்தைக் கொண்டு, அதற்கேற்ற உண்மையைத் தேடி, அதனை நிரூபிப்பதுதானே தவிர, அவரின் சொந்த அபிப்பிராயங்களைச் சார்ந்தவை அல்ல என்பதனையும் திறனாய்வு என்பது தன் சொந்த அபிப்பிராயங்களையும், நோக்கத்தையும் சார்ந்தது என்றும், ஆராய்ச்சிக்கும், திறனாய்வுக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்குகிறார் தொ.ப.
தொ.ப தமிழாராய்ச்சியை ஆரம்பக் காலம் (1820-1920), சீரான வளர்ச்சி காலம் (1920 - 1970 ), 1970 க்கு பின் தொடங்கி 2000 வரை என்பதைச் சமகாலம் என்று மூன்று காலமாக வகுத்துக்கொள்கிறார்.
ஆரம்பக் காலம் (1820 - 1920 ):
தொடக்கக் காலத் தமிழாராய்ச்சியில், ஐரோப்பியர்களின் தமிழ் இலக்கிய விமர்சனங்களை ஏ. வி. சுப்ரமணிய ஐயர் கணிப்பதில் தொடங்குகிறது தொடக்கக் காலத் தமிழாராய்ச்சி. ரெயினீஸ் அடிகளின் செந்தமிழ் இலக்கண ஆராய்ச்சி (1828 ), பூமி சாஸ்திரம் (1835 ) 1882 இல் தொல்லியல் துறையின் அமைப்பு மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சிகள் தமிழாராய்ச்சியினை அறிவு சார்ந்த ஆராய்ச்சியாக நகர்த்தியது என்பதனை நாம் அறிய முடிகிறது. வேதநாயகம் பிள்ளை, உ.வே.சா. அவர்களின் முயற்சியினால் அதுவரையிலும் செய்யுள் வடிவாக இருந்த இலக்கணங்கள் உரைநடை வடிவங்கொண்டதனை, அதுவே நாவல்களின் தோற்றத்திற்கு ஓர் அடித்தளமாக இருந்தது என்பதனை இவ்வுரையில் நாம் காணலாம்.
இக்காலகட்டத்தில் திராவிடக் கொள்கைகள் பேசிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை போன்றோர்களின் இலக்கியங்கள், சுதேச இயக்கம் வழியாக பாரதி, வ.உ.சி முதலானோர் அரசியல் விடுதலையை மையப்படுத்தி வெளிவந்த தேசிய இயக்கிய கொள்கை படைப்புகள், 1900 ல் அயோத்தி தாச பண்டிதர், லட்சுமி நரசு போன்றோர்கள் மூக விடுதலையையும், சமத்துவத்தையும் முன்னிறுத்திய தலித் இயக்கப் படைப்புகள் இக்காலத்தில் தான் வெளி வரத் தொடங்கியது.
சீரான வளர்ச்சி காலம் (1920 - 1970 ): 1915 முதல் பார்ப்பனரல்லாதோர் இயக்கங்கள் எழுந்த இக்காலகட்டத்தில் சமூக அரசியல் கொள்கைகள் தீயாகப் பரவியது. பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி போன்றோர்கள் தமிழ் வழியாகச் சமூக விடுதலை, சீர்திருத்தக் கொள்கைகளைச் சொற்பொழிவாகவோ, உரைநடையாகவோ சமூகத்தில் கொண்டு சேர்த்து ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது இக்காலகட்டத்தில் தான். 1920 தொடங்கி 1940 வரை காந்தியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த படைப்புகள் இந்தக் காலகட்டத்தில் தான். இதனை மணிக்கொடி காலம் என்று குறிப்பிடுவதுண்டு. தமிழ் இலக்கியங்களை மார்க்சியக் கொள்கைகளோடு அணுகியது என்பதும் இந்த இரண்டாம் கட்ட தமிழாராய்ச்சி வளர்ச்சியில் அடங்கும்.
1970 க்கு பின் தொடங்கி 2000 வரை: இக்காலகட்டமானது மொழி வளர்ச்சியின் முழுமையை நோக்கி நகர்ந்த காலம். இக்காலகட்டத்தில் புதுக் கவிதைகள், வானம்பாடி இயக்கம், தமிழ்த் தேசியப் படைப்புகள், பெண்ணியம், தலித்தியம், ஈழம் போன்ற இனப்போராட்டங்களின் குரல்கள் எனத் தற்காலிகப் போராட்டங்களைப் பேசுபவையாகத் தமிழ் மொழி வளர்ந்து நிற்கிறது என்று கூறுகிறார் தொ. ப.
தமிழாராய்ச்சியில் முக்கியமானவர்களின் பட்டியலை நாம் காண முடிகிறது இந்த உரையில். அந்தப் பட்டியல் மூலம் கடந்த காலத்தில் தமிழ் வளர்ச்சிக்காகச் செயற்பட்ட படைப்பாளிகளைத் தெரிந்துகொள்வது மட்டுமில்லாமல் அவர்தம் அரசியல் நோக்கங்களையும், சமூக அக்கறையினையும் வாசிப்பவரை உற்று நோக்க வைக்கிறது.
தமிழ் இலக்கிய வரலாறு, அதன் வளர்ச்சியின் மேல் ஆர்வமுள்ளோர் வாசிக்கவேண்டிய ஒரு கட்டுரை தொ.ப ஐயாவின் 'தமிழ் ஆராய்ச்சி வரலாறு'
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 24.08.2000 அன்று நிகழ்ந்த அன்னை அஞ்சுகம் தந்தை முத்துவேலர் அறக்கட்டளைச் சொற்பொழிவில் கலந்து கொண்டு தொ.ப. அவர்கள் ஆற்றிய உரையே இந்த புத்தகம்.
மானுடவியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் தொபவின் பங்களிப்பு குறித்து அவர் புத்தகங்கள் பலவற்றை இந்த வருடம் வாசித்ததன் மூலம் தெரிந்து கொண்டேன்.
தமிழாராய்ச்சி குறித்து அவரின் இந்த சொற்பொழிவு தொகுதி சுமார் 150 வருட கால வரலாற்றை வெறும் 68 பக்கங்களில் சுருக்கியுள்ளது.
“தமிழ்மொழி, அதிலுள்ள இலக்கியம் இலக்கணம் பற்றிய கொள்கைகள், தமிழ்ப் புலவரின் காலம், வாழ்க்கை, நூற்களின் தன்மை, தரம், அவை எழுதப்பெற்ற சூழ்நிலை, புலவருக்கும் அவரை ஆதரித்த அரசர், வள்ளல் முதலியோர்க்கும் இடையே நிகழ்ந்த உறவு ஆகியவைகளைப் பொருளாகக் கொண்டு, விருப்பும் வெறுப்பும் இன்றி, நம்பத்தகுந்த ஆதாரங்களை வைத்துத் தக்க பரிசீலனை முறைகளைக் கையாண்டு, தற்காலப்பண்புடன் ஆராய்ந்து, உண்மையை நாடும் முயற்சியே தமிழ் ஆராய்ச்சி ஆகும்”
என்று 1958ல் ஏ.வி.சுப்பகரமணிய ஐயர் எழுதிய தமிழாராய்ச்சி புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தமிழாராய்ச்சியில் விளக்கத்தோடு தன் உரையை தொடங்குகிறார் தொ.ப.
ஆய்வும் அபிப்பிராயமும் சேர்ந்தது தான் விமர்சனம் என்கிறார். 1800 களில் பாளையங்கோட்டையில் சி.டி.இ.இரேனியஸ் அடிகள் தொடங்கிய புத்தகங்கள் குறித்து விளக்குகிறார். தென்னகத்து ஆக்ஸ்போர்டு அழைக்கப்படும் பாளையிலிருந்து தமிழாராய்ச்சியின் சான்றுகள் தொடங்கியதில் எந்த வியப்பும் இல்லை. எண்ணற்ற கல்வி நிலையங்களின் பிறப்பிடம் அதுவே.
1920,1970க்கு பிற்ப்பட்ட காலப்பகுதியை மூன்று பகுதிகளாக பிரித்து அப்போது ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கிறார் ஆசிரியர்.
திருவள்ளுவரை தெய்வ காலத்துக்கு ஒப்பிட்டு எழுதிய ஆராய்ச்சியாளர்களை இடித்துரைக்கிறார்.
முற்காலத்தில் ஒரு ஆசிரியர் எழுதிய புத்தகத்தின் கருத்துக்களை மறுத்தோ, எதிர்ப்பு தெரிவித்தோ மற்ற ஆசிரியர்கள் எழுதிய பதிப்பு புத்தகங்களாக,சிறு வெளியீடுகளாக வந்திருந்தன என்று தொபவின��� எழுத்தில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
அவை தற்காலத்தில் வலைதளப்பதிவுகளாக சுருங்கிவிட்டதைக் காண முடிகிறது.
அத்தகைய வெளியீடுகள், அந்தந்த காலம் குறித்தும் மக்கள் மனநிலை குறித்தும் அறிந்து கொள்ள நல்ல வழியாக அமைந்துள்ளது.
அந்த சமயத்தில் வெளி வந்த கட்டுரைகள், புத்தகங்கள், ஆராய்ச்சி தொகுப்புகள் போன்றவற்றை ஆராய்ந்து தன் கருத்துக்களை இந்த உரையில் பதித்துள்ளார்.
எழுபதுகளிலேம் எண்பதுகளிலும் ஏற்பட்ட தமிழ்புனைக்கதைகளின் வட்டார அடையாளங்கள் நிறைந்திருந்த மாற்றத்தை சுட்டுகிறார்.
தமிழிலக்கியங்களின் வரலாறு மறைக்கப்பட்டதால் அதன் பன்முகத்தன்மையும் மறைக்கப்பட்டுள்ளது என்ற தன் கருத்தை முன் வைக்கிறார்.
இறுதியாக தமிழாராய்ச்சிக்கு தனித்து விளங்கியவர்களாக ஆசிரியருக்குத் தோன்றிய நால்வரை குறித்து விவரிப்பதோடு புத்தகம் நிறைவு பெறுகிறது.
தமிழாராய்ச்சி குறித்து நாம் எதுவும் அறிந்து கொள்ளவில்லை என்பதை இந்த புத்தகம் வாசிக்கும் போது உணர்ந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் இதில் விவரிக்கப்பட்ட பல அறிஞர்கள் பெயர்கள் கூட நான் அறியவில்லை .
நிறைய தகவல்கள் இந்த புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.