அன்றாட வாழ்வை சிக்கலுக்கு உள்ளாக்கும் அபத்தங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் ஆவேசம், அவற்றிலிருந்து தப்ப முடியாமையின் பரிதவிப்பு, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்பு, பாசாங்குகளின் மீதான நகைப்பு, அன்பின் தழும்பல்கள், உவகையின் பிதற்றல்கள், நிறைவின் மௌனம் என யாவற்றையும் கொண்டவை இக்கவிதைகள். சுடரின் அசைவைப்போல நளினமும் ஒளியும் ஒருசேர நிகழும் அபூர்வ கணங்களையும் கொண்டவை. எளிய சொற்களைச் சோழிகளாக்கிச் சுழற்றி வீச அவை நவமணிகளாகும் ஜாலத்தை பொன்முகலியின் மொழியில் காணமுடிகிறது.
தீபு ஹரி (பொன்முகலி) (பிறப்பு: நவம்பர் 18, 1983) தமிழில் எழுதி வரும் கவிஞர், சிறுகதையாசிரியர்.
இலக்கிய வாழ்க்கை 2018-ல் தீபு ஹரியின் முதல் கவிதை வெளியானது. 2019-ல் முதல் கவிதைத் தொகுப்பு "தாழம்பூ" தமிழினி பதிப்பகம் மூலம் வெளியானது. இலக்கிய ஆதர்சங்களாக பாரதியார், புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, எமிலி டிக்கன்சன், தஸ்தோவெஸ்கி, எர்னஸ்ட் ஹெமிங்வே, பஷீர் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். பொன்முகலி, தீபு ஹரி என்ற இரு பெயரிலும் எழுதி வருகிறார். இணைய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்.
விருது 2020-ல் கவிஞர் தக்கை வே. பாபு நினைவு கவிதை விருது வழங்கப்பட்டது. 2022-ல் ஸ்பாரோ இலக்கிய விருது பொன்முகலிக்கு வழங்கப்பட்டது.
நூல்கள் பட்டியல் கவிதைத்தொகுப்பு தாழம்பூ (2019) ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது(2021
புத்தகம்: ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது ஆசிரியர்: பொன்முகலி வகை: கவிதைத் தொகுப்பு பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்.
கவிஞர் பொன்முகலி எழுதிய இக்கவிதைப் புத்தகத்தை வாசித்து முடித்திருக்கிறேன். இப்புத்தகத்தில் உள் கவிதைகளை வாசிக்கும்போது சற்று நிதானமும், ஆழ்ந்த வாசிப்பும் தேவைப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு கவிதையும் மிகச்சிறந்த பாடு பொருளைக் கொண்டுள்ளது. சிறந்த முறையில் உவமை கையாளப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தில் உள்ள கவிதைகள் மொத்தமும், வாசிக்கும் வாசகரின் உள் மனதைத் தொட்டுச் செல்கிறது.
"நடந்த பாதைக்குத் திரும்பாதே.... கடந்த ஆற்றை நினைக்காதே..... " என்ற கவிதையின் வாயிலாக, கடந்த காலத்தை நினைத்து காலத்தை விரயமாக்காதீர் எனக் குறிப்பிட்டுள்ளார் கவிஞர்.
"சிறிய பூச்சிகளை மயிலிறகால் விலக்குற போது நீ துறவியாகு " என்ற கவிதை நன்றாக இருக்கிறது.
" இந்த நள்ளிரவு ஒரு மணி, இருபத்து மூன்று நிமிடம், 5 நொடியில் ஒரு நோடி முன்னே நகர்ந்து விட்டது. சுதாரிப்பதற்குள் அடுத்த நொடியும் அடுத்தடுத்தடுத்த நொடிகளும் ... " என்ற கவிதை காலத்தின் அருமையையும் நேரத்தின் உன்னதத்தையும் உரைக்கிறது.
"எல்லோருக்கு அவரவர்களுடைய அன்புக்குத் தகுந்தாற்போல் வாழ்நாளில் என் நேரத்தைப் பிரித்து வைத்திருக்கிறேன். சிலருக்கும் நிமிடக்கணக்கில், சிலருக்கு மணிக்கணக்கில். காலமற்ற அன்பொன்றுக்கும் என் மனப்பரப்பில் ஒரு பெரிய இடத்தை ஒதுக்கி வைத்திருக்கிறேன். நீ இப்போது தயங்கித் தயங்கி நின்று கொண்டிருப்பது அதன் வாசலில் ." - படித்ததில் பிடித்தது ...
" ஒரு மரக்கட்டையைக் காதலித்தேன் பிறகு அதிலிருந்து உருவான ஒரு நாற்காலியை பிறகு அதில் அமர்ந்த அதிகாரமுடைய சுமாரான மனிதர்களை . பிறகு மீண்டும் மரக்கட்டைகளை ." - இக்கவிதையில் மனிதன் ஒருவனைக் காதலித்த பிறகு இயற்கையைக் காதலிக்கவே மனம் விரும்புகிறது எனும் உண்மை வெளிப்பட்டிருக்கிறது.
"இறப்பை நான் இப்படியாக இப்போது வரை யோசித்தது இல்லை. குளிர் இரவில் நாமறியாது நம்மீது பொழிகிற பனியாக... " - இறப்பைப் பற்றிய இக்கவிதை எதார்த்தத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. மிகச்சிறந்த கவிதை.
"ஒரு கவிதையை இப்படி எழுது, அப்படி எழுது என்று யாரும் என்னிடம் சொல்லக்கூடாது. பரமபத ஏணியில் பல நேரம் சறுக்குவேன் பாம்பாக சில நேரம் விழுங்குவேன். புள்ளி ஒன்றிற்கும் திரும்புவேன். யாரும் என்னை முறைத்தால் அடியோடு ஆட்டத்தைக் கலைத்து கெக்கலிப்பேன். " என்ற கவிதை, ஒவ்வொரு கவிஞரின் மனசாட்சியாக பிரதிபலிக்கிறது. கவிஞனது உள்ளத்தைப் பார்ப்பது அத்துனை சுலபமில்லை.
"மீண்டும் சொல்கிறேன் பிசாசைப் போல் நள்ளிரவில் எழுந்து கவிதைகள் எழுதுவதை முதலில் விட்டுத் தொலை" என்ற கவிதை மனத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. வளரும் கவிஞனைக் குறைத்து மதிப்பிடும் சமூகத்தை / குடும்பச் சூழலை எடுத்துரைக்கிறது. மிகச்சிறந்த கவிதை....
"இந்த உலகம் பைத்தியகாரர்களை விரட்டி விரட்டிக் காதலிப்பது போல் வேறு யாரையும் காதலித்ததில்லை. இனிக் காதலிக்கப் போவதும் இல்லை.. "- படித்ததில் பிடித்தது.
"தேர்தல் வந்தால் பல்லைக் காட்டி பயணம்போ கூட்டம் சேர்த்து கும்மியடி காரியம் முடிந்தால் குண்டியில் அடித்துக் கும்பலைக் கலை. " இக்கவிதை இக்கால அரசியலைப் பேசுகிறது. மிகச்சிறந்த கவிதை....