கயல்விழி; தனக்குத் தன் கையே உதவி என்றிருப்பவள்; உறுதியும் துணிச்சலும் மிக்கவள்; சுருங்கச் சொன்னால், தான் பெற்றுள்ள ஒற்றை வாழ்வை தனக்குப் பிடித்த வகையில் வாழ வேண்டும் என்று எண்ணுபவள். வேலை விசயமாக நியூயோர்க் செல்கிறாள், இவள். அந்நேரத்தில், அங்கு சந்திக்கப் போகும் மனிதர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவள் வாழ்வில், சுபாவத்தில் எத்தகைய மாற்றங்களை உண்டு பண்ணுகின்றது என்பதையே இக்கதை சொல்லிச் செல்கின்றது.