முக்காலத்திலும் ஏதாவது ஒன்றில் நம் ஒவ்வொருவராலும் உணரப்படும் உன்னதமான உணர்வுதான் காதல். அத்தகைய அழகான காதலில் கடந்த காலத்தில் தொலைந்த நம் நாயகி கனவுகளில் அவள் காதலனான நம் கதையின் நாயகனுடன் காதலில் கசிந்துருகி கரைந்தவள் பல போராட்டங்களுக்கு பிறகு நிகழ்காலத்தில் நாயகனை கைப்பிடிக்கும் சுவாரசியமான கதை தான் ' திகட்டாத தேன்சுவை நீயடி' . விதிவசத்தால் அனைத்து உறவுகளையும் இழந்து தனிமரமாக வாழ்ந்து வந்தவனின் வாழ்வில் இணைந்து அனைத்து சொந்தங்களையும் அவள் மூலம் அவனுக்கு கிடைக்கச் செய்து அள்ள அள்ள குறையாத காதல் நவரசங்களை நாயகனின் வாழ்வில் தந்த திகட்டாத தேன்சுவை தான் நம் கதையின் நாயகி.....