Jump to ratings and reviews
Rate this book

இது தான் பார்ப்பனியம் !

Rate this book
உலகின் எல்லா நாடுகளிலும் அரசதிகாரம் உருவான போது அதனை நியாயப்படுத்தும் சித்தாந்தங்களும் உருவாகும்.இதுவே உலக வரலாறு காட்டும் உண்மையாகும். அரசதிகாரம் மக்களை ஒடுக்கிய காலங்களில் அதனை நியாயப்படுத்தும் சாத்திரங்களும் எழுதப்படும். பெரும்பாலான மக்கள் எழுத்தறிவற்றவர்களாக வாழும் காலங்களில் எழுதப்பட்ட சாத்திரங்கள் அவர்களது சிந்தனைத் திறனை அடிஐப்படுத்தி தாங்கள் அடிமை என்று தங்காளையே ஏற்கச் செய்யும் இந்திய துணைக்கண்டத்தில் அவ்வாறு உருவான சித்தாந்தத்தைத் தான் நாம் பார்ப்பனியம் என்று அழைக்கிறோம். பார்ப்பனியம் என்பது ஒரு கருத்தியல் வன்முறை ஆகும். பிறப்பின் வழியாகவே ஏனைய மக்கள் திறள்களை இழிந்தவர்கள் என்று அது அடையாளம் காட்டுவதையே நாம் வன்முறை என்கிறோம். .. .. ..

.. .. .. தங்களுக்கு மட்டுமே உரிய வடமொழி, வேதம் ஆகியன அறிவார்ந்த விவாதங்களுக்கு அப்பாற்பட்டன என்பதும் வட்டார மொழிகளை நிராகரித்து சமஸ்கிருதத்தை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதும் கோயில்களின் தலைமையும், மற்ற சாதியாரின் சடங்கியல் தலைமையும் தங்களுக்கேயுரியன எனச் சாதிப்பதும் பார்ப்பனியத்தின் வேஷங்கள் ஆகும். .. .. ..

.. .. .. ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும் பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும் சனநாயகத்துக்குமான தேடலாகும். .. .. ..

62 pages, Kindle Edition

Published March 3, 2022

35 people are currently reading
34 people want to read

About the author

தொ. பரமசிவன்

34 books231 followers
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.

Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
35 (66%)
4 stars
10 (18%)
3 stars
2 (3%)
2 stars
4 (7%)
1 star
2 (3%)
Displaying 1 of 1 review
Profile Image for Dinesh.
128 reviews9 followers
October 6, 2022
ஆதி காலம் முதல் அண்மை காலம் வரை எவ்வாறு பார்ப்பனர் கை ஓங்கி இருக்கிறது என்று மிகத்தெளிவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எழுதியிருப்பது சிறப்பு.

ராஜாஜியை ஒரு ஞானியாக மட்டுமே நமக்கு கற்பித்த பாடபுத்தகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு உள்ளது இப்புத்தகம்.

பத்திரிக்கைகளின் பார்ப்பனிய பாசம், சங்கராச்சாரியரை ஜகத்குருவாக முன்னிறுத்துவதிலுள்ள அரசியல் என இருண்ட பக்கங்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ராஜாஜியா பெரியாரா என்று எழுத்து தடம் புரண்டதை மட்டுமே குறையாக சொல்லலாம்.

இப்புத்தகத்தை பார்ப்பனர்கள் படித்தால் கடுப்பாவார்கள் என்பது உறுதி!
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.