Jump to ratings and reviews
Rate this book

எழுதும் கலை [Ezhudhum Kalai]

Rate this book
நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது. இலக்கிய ஆக்கங்களில் ஈடுபடுபவர்களுக்கு இலக்கியத்தில் எது இதுவரை சாதிக்கப்பட்டிருக்கிறது என இது காட்டுகிறது. அதை அடைவதற்கான சவாலை அறிமுகம் செய்கிறது என்று சொல்லலாம். எழுத ஆரம்பிக்கிறவர்களுக்கு மட்டுமல்லாமல் வாசிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும். நவீன இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்து கொள்வதுதான் இது. இதன் மூலம் வாசகர்கள் ஓர் இலக்கிய ஆக்கத்தில் குறைந்தபட்சம் என்ன எதிர்பார்க்கலாம் என்று அறிந்துகொள்கிறார்கள். அது ரசனையைக் கூராக்க உதவும்.

165 pages, Kindle Edition

First published January 1, 2008

29 people are currently reading
38 people want to read

About the author

Jeyamohan

209 books845 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
19 (50%)
4 stars
18 (47%)
3 stars
1 (2%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
7 reviews
January 18, 2025
எழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு கதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய வடிவங்களின் அடிப்படைகளை அறிமுகம் செய்துவைக்கிறது இந்நூல். ஒரு வாசகனாகவும் இதன் மூலம் அடிப்படை இலக்கணங்களை தெரிந்துக்கொண்டு ஒரு இலக்கியப்பிரதியிடமிருந்து எவற்றை எதிர்ப்பார்க்கலாம் என தெரிந்துக்கொள்ளமுடியும்.

தமிழ்ச்சூழலில் எந்த கலைவடிவத்தை எடுத்து உடைத்து அதற்கான தர்கங்களை வரையறை செய்தாலும், ”அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. கலை எதற்குள்ளும் அடங்காது” என்று சொல்கிறவர்கள் ஏராளம். இக்கண்ணோட்டம் அக்கலை வடிவத்தை முன்னோக்கி செல்ல அனுமதிக்காது. மேற்கத்திய நாடுகளில் இசை, திரைக்கதை, புகைப்படம் என அனைத்து கலைவடிவத்திற்கும் வரையறைகள் உள்ளன. புதிதாக அத்துறைக்கு வர ஆசைப்படும் ஆர்வலர்களுக்கு இவ்வரையறைகள் பெரும் உதவியாக இருக்கும்.

சிட் ஃபீல்ட், ப்ளேக் ஸ்னைடர், ஜான் ட்ரூபி போன்ற அறிஞர்கள் திரைக்கதையின் கோட்பாட்டை உடைத்து வரையறை செய்தவற்றை படித்ததால் மட்டுமே திரைக்கதையின் மேல் ஆர்வமும் கவனமும் குவிந்து இன்று அது என் தொழிலாக மாறியுள்ளது.

அதுபோல, இலக்கியத்தின் அடிப்படைகளை ஒருவர் சொல்லித்தராவிட்டால் அக்கலை வடிவத்தை அணுகும் முறை தெரியாமலேயே போய்விடும். இக்காரணத்தால் இன்று பலர் சினிமாவின் மூலம் மட்டுமே கதைகளை கேட்டு பழகி, ஒரு நாவலையோ சிறுகதையையோ படித்தால் - போர் அடிக்கிறது - என்று சொல்லத்தொடங்கிவிட்டனர். அவர்களை பொருத்தவரை திரைக்கதை வடிவத்தில் ஒரு கதை பொருந்தாவிட்டால், பக்கத்திற்கு பக்கம் திருப்பங்களை கொண்டிராவிட்டால் அக்கதை சலிப்பு தட்டிவிடும்.

ஒரு காலத்தில் எனக்கும் இச்சிக்கல் இருந்தது. அதன் பின்னர், ‘நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்’ என்கிற ஜெயமோகனின் நூலினை பாதி வாசித்தப்பின்பு ஒரு தெளிவு கிடைத்தது. முன்னெப்போதையும் விட வாசித்தலின் மேல் ஆர்வம் பெருக்கெடுத்தது. பெரும் நாவல்களை வாசிக்க தூண்டியது.

இந்நூல், ‘நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்’ நூலின் ஒரு குட்டி என்று சொல்லலாம்.

இந்நூலிலிருந்து கற்றுக்கொண்டவை:
1. சிறுகதை சமையல் குறிப்பு
சிறுகதை என்பது சிறிய கதை என்று அர்த்தமாகாது. வாசகனை உள்ளூர இழுத்து பங்கெடுக்க செய்து, இறுதியில் எதிர்பாரா திருப்பத்துடன் ஒரு கதையை முடிப்பதே சிறுகதை. அத்திருப்பம் வாசகன் மனதில் இன்னொரு தொடக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

சிறுகதையின் மூலம் நீதி சொல்லக்கூடாது. அந்நீதி வாசகனுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

சிறுகதையின் முக்கியமான பங்கு வாசக பங்களிப்பு. அதனால் விவரிப்புகளும் மனவோட்டங்களும் சீராக வாசகனை அவ்விடத்திற்கே அழைத்துச்செல்லும்படி அமையவேண்டும். இது சிறுகதை எழுத்தையும் தாண்டி ஒரு கதையை நரேட் செய்யும்போதும் பயன்படுத்த வேண்டிய ஒரு யுக்தி.

கதை சொல்லல் என்பது, ‘தகவல்களை ஒப்பிப்பது அல்ல. அனுபவத்தை கேட்பவருக்கு அளிப்பது’

2. நாவல் ஒரு சமையல் குறிப்பு

ஒரு முழுவாழ்க்கை சித்திரத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கவேண்டும். மையக்கதாபாத்திரம் என்று ஒன்று தேவையில்லை. அப்படி ஒரு பாத்திரம் இருந்தாலும், பிற கதாபாத்திரங்கள் முக்கியம். அவையனைத்தும் வெவ்வேறு தர்க்கங்களும் செயல்பட வேண்டும். அவர்களின் தத்துவங்களும் செயல்களும் ஒன்றோடொன்று முரண்படும்போது நாடகீய தருணங்கள் அமையும்.

எழுதுவதே கலை. திரைக்கதையைப்போல அடுத்தடுத்த சம்வங்கள் அனைத்தையும் திட்டம்போட்டு நாவல் எழுதுவது உகந்ததல்ல. ஒரு தொடக்கம். ஒரு மையக்கரு. Designing Principle. ஆகியவற்றை மனதில் வைத்து எழுதிப்பார்த்து தான் நாவலை கண்டடைய வேண்டும். இதனால் ஒரு நாவலை முடிக்க பலவருடங்கள் ஆகலாம்.

என்பதுகளுக்கு முன்னர் வரை நாவல்கள் ஒரே நீரோட்டத்தில் உருண்டு திரண்டு பெருத்துக்கிடக்கும். டால்ஸ்டாயின் நாவல்கள் ஒரு உதாரணம். அதன் பின்னர் வந்த நவீன நாவல்கள் இன்னும் செறிவுடன் எழுதப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டால் அதன் அனைத்து பக்கங்களும் அதில் பதிவுசெய்யப்பட வேண்டியது அவசியம். எழுத்தாளனின் ஆழ்மன கேள்விகளுக்கு விடைதேடலே இந்நாவல்கள்.

உதாரணம். ஒரு நாவல் 18ம் நூற்றாண்டு காலணிய காலம் என்கிற கதைக்களத்தை எடுத்துக்கொண்டால்: அச்சூழலின் மன்னர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், தாசிகள், படித்தவர்கள், ஏழைகள் - என அனைத்து தரப்பினரையும் உட்கொண்டு அந்நாவல் எழுதப்பட வேண்டும். பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் ஒரு சிறந்த உதாரணம்.

இது போன்ற நாவல்கள் நமக்கு வாழ்க்கையை பற்றிய பருந்துப்பார்வையை அளிக்கிறது. புதிய புரிதல்களை உருவாக்குகிறது. நாவல் நமக்கு பாடம் புகுட்டாது. அந்நாவலை வாசித்து பெற்ற அனுபவங்களை சீராய்ந்து நாம் நமக்கான பாடங்களை உருவாக்கிக்கொள்கிறோம்.

3. கட்டுரை ஒரு சமையல் குறிப்பு

கட்டுரை, ஆராய்ச்சிக்கட்டுரை என இரு வெவ்வேறு வடிவங்கள் உள்ளன. குழப்பிக்கொள்ள கூடாது. ஒரு கட்டுரை ஏற்கனவே வகுக்கப்பட்ட விழுமியங்களை மீண்டும் அடிக்கோடிட்டு சொல்லும். ஆராய்ச்சிக்கட்டுரை இதுவரை வரையறுக்கப்பட்ட கருத்துகளின் மேல்நின்று புதிய கருத்தை நிறுவும்.

கட்டுரை ஒரே ஒரு சீர்கருத்தை மையமாக வைத்து எழுதப்பட வேண்டும். அதற்கு சம்மந்தம் இல்லாத எதையும் உள்ளே வைத்திருக்க கூடாது. ஒரு கருத்துக்கு ஒரு உதாரணம் போதுமானது. பிற உதாரணங்களை வாசகர்கள் யூகித்திக்கொள்வார்கள்.

இதன் பின்னர் எழுதுதல் பற்றிய சந்தேகங்களை வாசகர் கடிதங்கள் மூலம் ஜெயமோகன் பதிலளிக்கிறார். இதுவரை எழுததல் பற்றிய புத்தங்களில் ஜெயமோகனை தவிர சீராக எழுதியவர் எவருமில்லையென்றே தோன்றுகிறது. சிறந்த புத்தகம்.
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.