என்னுரை இலக்கில்லாத பயணம் - வித்யாஷங்கர் லலித கலைகளும் நாமும் உடனிருப்பு கதர் குற்றாலம் / பாபவிநாசம் கோயில்கள் கதாசிரியனான கதை இரு வேறு உலகம் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன் ஓவியன் மழைபோல மனிதர்கள் ருத்ரபூமி (காசி நாள்குறிப்பு) கும்பமேளா யாத்திரை வாய்த்தது நானும் என் கவிதைகளும் மற்றும் சூழலும் கற்றனைத்தூறும் கவிதை என் கவிதை ஊற்று அண்ணாச்சி 60 அம்மாதான் என் ஆதர்ஸம் ஒரு கதை நினைவுகள் கடைசிவரை நாகர்கோயில் மனிதர்தான் இலக்கியவாதிகளின் தீபாவளி அனுபவங்கள் என் ஊர் புனைபெயர் நானும் விகடனும் கவிக்குப் பிடித்த கவிதை பரமன் என்கிற மனிதன் வாசகனை இழந்தேன் ஒரு நதி பல சாயல்க
25.09.1947ல் பிறந்த கவிஞர் விக்ரமாதித்யனின் இயற்பெயர் நம்பிராஜன். தென்காசியில் வசிக்கும் இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. PUC படித்த இவர், மளிகைக்கடைப் பையன், சித்தாள், இட்லி-வடை விற்பவன், சலவை நிலைய எடுபிடி, மெத்தைக்கடைப் பையன், காயலான்கடை உதவியாள், ஓட்டல்-கிளீனர், கட்பீஸ் ஸ்டோர் பணியாள், சர்வர், குன்றக்குடி ஆதீன அட்டெண்டர், ஜலகன்னி-தம்போலா-வளையமெறிதல் ஸ்டால்களில் கேஷியர், சீட்டு-கிளப் கேஷியர், ஊர் ஊராய்ப் போய் புத்தக வியாபாரம், அச்சக உதவியாளர், பிழை திருத்துபவர், துணையாசிரியர், பொறுப்பாசிரியர் போன்ற பல தொழில்களைச் செய்திருக்கிறார். சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன், தளபதி ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறார். முழுநேர எழுத்தாளரான இவர், தமது மாணவப் பருவத்தில் 1964ல் எழுதத் தொடங்கினார். இவரது எழுத்து முதன்முதலில் சுதேச மித்திரன் மாணவர் இதழில் வெளியாயிற்று.
விளக்கு, மஹாகவி, சாரல் முதலான விருதுகளைப் பெற்ற இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.