ஐ டி துறையில் பணி புரியும் கதையின் நாயகன் ஆதிரன், வீட்டினரின் வற்புறுத்தலுக்கு அமைய நாயகி அமிர்தாவை திருமணம் செய்து சென்னைக்கு அழைத்து வருகின்றான். அவளுடனான வாழ்க்கையை தொடங்க தயங்கும் ஆதிரனுக்கு வேலை செய்யும் இடத்தில் ஒரு காதலி இருக்கின்றாள் என்கின்ற உண்மை அமிர்தாவுக்கு சென்னை வந்த பிறகு தான் தெரிய வருகின்றது... திரில்லர், சஸ்பென்ஸ், காதல், ஆக்ஷன், காமெடி, சென்ட்டிமென்ட் என்று அனைத்தும் அடங்கிய மற்றும் கதையை பற்றி சுருக்கம் கூட எழுத முடியாத அளவுக்கு திருப்பங்கள் நிறைந்த நாவல்... படித்து உங்கள் ரேட்டிங்ஸ் மற்றும் ரிவ்யூக்களை தெரிவிக்கும்படி அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்...
நம்பி வாங்கியதற்கு சிறப்பான சம்பவம். நூலின் முதல் 50 பக்கங்கள் விறுவிறுவென்று போகிறது. உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் தமிழ் படங்களின் முதல் 30 நிமிடங்கள் போல். கிட்டத்தட்ட விஸ்வரூபம் படம் கண் முன் வந்து செல்கிறது. நிமிர்ந்து உட்கார்ந்து அடடா!! புத்தகம் செமயா இருக்கே என்று நினைத்தால், அதற்கு நேர்மாறாக, அடுத்த 200 பக்கங்கள் வளவளவென்று போகிறது.
புத்தகம் எங்கு சறுக்கி விடுகிறது என்றால், எழுத்தாளர் ஒரு உளவாளியின் வாழ்க்கையோ அல்லது உளவாளியாக பணிபுரிபவரின் குடும்பம் படும் பாட்டையோ ஏதாவது ஒன்றையாவது அழுத்தமாக பிரதிபலித்திருக்கலாம். எதையுமே செய்யவில்லை. குடும்பம் அவன் உயிருடன் இல்லை என்று கிரகித்து அதிலிருந்து மீண்டு ஒரு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வை ஜஸ்ட் லைக் தட் என்று இரண்டு பத்திகளில் ஒரு பத்திரிகையின் எட்டாவது பக்கத்தில் பொட்டி நியூஸ் போட்டது போல் எழுதி இருக்கிறார். இரண்டே பத்திகளில் 5 வருடங்கள்.
மேலும் ஒரு வேண்டுகோள், கணவன் மனைவி உறவு உடல் மனம் இரண்டும் சம்பந்தப்பட்டது என்று ஆங்காங்கே கூறியிருந்தாலும், அவர்களின் மனம் திறந்த உரையாடல்களை ஆங்காங்கே எழுதி நெகிழும் தருணங்களாக கடத்தி இருக்கலாம். இதற்கு மேல் நான் கூறினால் அது spoiler ஆக மாறிவிடும். புத்தகம் படிக்க இருப்பவர்கள், படித்து முடித்தவர்கள் என்னுடைய கருத்துடன் ஒத்து போவார்கள் என்று நம்புகிறேன்,
முதல் 50 பக்கங்களில் இருந்திருக்கும் விறுவிறுப்பு, அடுத்தடுத்த பக்கங்களில் ஆங்காங்கே இருந்திருக்குமானால் ஒரு நல்ல வாசிப்பாக இருந்திருக்கும்.
Such a nice novel, My father also works in the army, so I can't say that he will always come back, but my father always says that he is an army man, no promise about return but proud always with us, at same time emotional ah vum irukkum athu intha book padikkum pothu feel aachu. Na ungaloda niraiya books padichutten am na oru silent reader but after finishing this story kandipa sollanum nu thonuchu ...... thank you for this story
Nice story about a persons love towards his likes!!!
You rocked in this story too!!!
"Love" is in another dimension here... How he loves his job and the way the writer has told it is wonderful... You nailed his character!!! Sathasivam who hides his pain & understands him and respect his decision, superb dad... Title is in two different ways and both are beautiful!!!! Congrats for this nice story...
Nice one.When I seen the description and starts to read ,I thought it's like a normal one.But,pommu sis nailed in her style of writing with lots of twists.I predicted some scenes as well.I got emotional with amirtha scenes and adhiran's diary and letter to amir and his father.Very Lovable and entertaining story!!