"உன்ன பத்தி பேசணும்ன்னா நான் யார்கிட்ட பேசணும்... "ஆர்ப்பாட்டம் இல்லாமல் விழிகளால் ஊடுருவியபடி கேட்டான்.
துவாரகாவிற்கு தான் இதயம் படபடவென துடிக்கத் தொடங்கியது.
வார்த்தைகள் தந்தியடிக்க, "என் என்ன பத்தி... என்னை பத்தி என்ன பேச போறீங்க?" என்றவளை மேலும் சோதிக்கவென்றே,
"உன்ன என்கூட கூட்டிட்டு போகனும். ஐ வான்ட் டூ டேக் யூ வித் மீ... மே ஐ நோ த ப்ரொசீஜர்" என்று கூலாக கூறியதில், 'என்ன ஹோட்டல்ல ஆர்டர் டேக் அவே பண்ணணும்ன்ற மாதிரி கேக்குறான்' என அவளுக்கு மயக்கமே வரும் போல் இருந்தது.
"நீங்க என்ன பேசுறீங்க? அதுவும் கோவில்ல நின்னு?" அவளின் முகம் அஷ்டகோணலாகியது.
மர்மப் புன்னகை பூத்த உதய், "நான் என்ன தப்பா பேசிட்டேன்?" என்று தாடையை தடவியபடி சிந்திக்கும் பாவனை கĭ