சொல்வளர்காடு – வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது. அனேகமாக அத்தனை கதைகளுமே கூறுமுறையில் வளர்ச்சியும் மாற்றமும் அடைந்தவை. நவீன கதைசொல்லல் முறைப்படி மீள்வடிவு கொண்டவை. அக்கதைகள் உருவாக்கும் இடைவெளிகளை, அக்கதைகளின் இணைவுகள் உருவாக்கும் இடைவெளிகளைத் தன் கற்பனையாலும் எண்ணத்தாலும் வாசகன் நிரப்பிக்கொள்ளவேண்டும் எனக் கோருகிறது இந்நாவல்.ஒன்றின் இடைவெளியில் இருந்து பிறிதொன்றைக் கண்டடைந்து நீளும் இதன் பாதை இந்திய மெய்ஞான மரபின் வளர்ச்சியின் தோற்றமும்கூட. ஆனால் தத்துவத்தை படிமங்கள் வழியாகவே இலக்கியம் பேசுகிறது. அந்த விவாதத்தை முழுமைசெய்ய வாசகனின் பங்களிப்பைக் கோருகிறது.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
சூதில் நாட்டையும் மானத்தையும் இழந்த பாண்டவர்கள் எல்லாவற்றையும் துறந்து காடேகி ஒவ்வொரு குரு நிலையாக சென்று எது அறம் என்று அறிவதற்காக ஒவ்வொரு வேதக்கல்வி நிலையங்களுக்குச் சென்று கற்கிறார்கள். முதல்முறை திருதராஷ்டிரனால் தாக்கப்பட்ட மூத்த கௌரவன் உடலின் ஆற்றல் சிறிது குறைந்து உடல் ஒரு பக்கம் கோணலாக கண்டார் இப்போது இரண்டாம் முறையாக பீஷ்மர் அவரை தாக்கி உடல் நலிவுற்று இறப்பின் விளிம்பில் ஆதுரசாலை கிடக்கிறார் .எதன் பொருட்டு இந்த மூடர்கள் மூத்தவரை தாக்குகிறார்கள் . எந்த அறத்தின் அடிப்படையில் காசி நாட்டின் இளவரசிகளை பீஷ்மர் கவர்ந்து வந்து அஸ்தினபுரி இளவரசர்களுக்கு அளித்தார் ? எதன் பொருட்டு எந்த அறத்தின் பொருட்டு துரியோதனன் மணக்க நினைத்த பெண்களை அர்ஜுனன் கவர்ந்து வந்தான் ? அந்த பிழையில் அல்லவா தொடங்குகிறது இவைகள் அனைத்தும் . நெறிகளின் அடிப்படையில் கௌரவர் செய்தது பெரும் கீழ்மை ஆனால் அரசியல் நோக்குகளில் அவன் செய்யக்கூடியதையே செய்தான் அத்தனை அரசர்களும் அதைத்தான் செய்கிறார்கள் எதிரி நாட்டின் மீது படை எடுக்கிறார்கள் பெண்களை வல்லுறவு கொள்கிறார்கள் கொன்று குவிக்கிறார்கள். பீமனின் ஆற்றலாலும் அர்ஜுனன் வில்லால் பாரதவர்ஷத்தை ஆள வேண்டுமென்ற கனவு கண்டார்கள் ஆற்றலை நம்பி அரசியல் களத்தில் நின்றார்கள் . இவர்கள் எப்படி பாண்டுவின் மைந்தர்கள் என்று கொள்ளப்படுகிறார்கள் பாண்டுவும் குந்தியும் ஒருமுறைகூட உடலால் சேராத போது அவர்கள் முழுக்க முழுக்க யாதவர் குருதி குந்திபோஜனின் வம்சம் ( போஜர் கூட குந்தியை தத்தெடுத்தவரே)அவர்கள் என்ன உரிமையில் அஸ்தினபுரியின் அரசை கோறுகிறார்கள் தங்கள் மைந்தர்கள் மீது உள்ள ஆற்றலின் நம்பிக்கையால் மட்டுமே ... அந்த ஆணவம் கௌரவர் சபை முன் அடிபட்டபோது திரவுபதி வஞ்சினம் உறைத்தாள் அதற்கு ஐவரையும் பலியாகக் வைத்தால் இவை அனைத்தும் நிகழக் காரணம் திரௌபதியின் ஆணவமே. இவர்கள் வேதம் என்று எதை கற்கிறார்கள் விளகமுடியாத ஒன்றை, இருப்பு என்று இல்லாததை இன்மையை இது நான் இருக்கிறேன் என்று உணர்ந்தது தத் என்று பெயர் கொண்டது பூவில் வண்ணமென விதையில் காடென கொலைவாலில் குருதியென பசுவில் அமுதென எங்கும் இருக்கும் அதை வணங்குவோம் .. இதில் முக்கியமான பகுதி இளைய யாதவன் தன் குருவிடம் தீ சொல் பெரும் இடம் அவனின் அழிவுக்கான விதை இங்கு ஊணப்படுகிறது . பிறகு யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்தி கொள்ளும் உள் பூசல்கள் குல மோதல்கள் அவற்றை மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கும் இளைய யாதவரின் சித்திரம் இதன் காரணமாக முதன்முதலாக இளைய யாதவருக்கும் அவரின் சகோதரர் பரசுராமருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு விடுகிறது. வெண்முரசு முழுக்கவே குழந்தையின்மை என்பது திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கிறது நிறைய அரசர்கள் குழந்தைக்காக வேள்வி நிகழ்த்துகிறார்கள் கொடை அளிக்கிறார்கள் பலியிடுகிறார்கள் தங்களையே பலி எனக்கு சமைத்து குருதி படைக்கிறார்கள். பதினோராவது நூலான சொல்வளர்காடு இலும் 3 ,4 அரசர்கள் குழந்தையின்மை கதைகள் வருகிறது மானிட வாழ்வின் தலையாநோக்கம் மைந்தர்களை பெறுவது தனக்குப்பின் அரசாலவும் தனக்கு நீர்கடன் செய்யவும் தன்னை வின்னேக வைக்கவும் ஒவ்வொரு மனிதருக்கும் மைந்தர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்காக அவர்கள் தங்களை பலியாக்கி கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆற்றல் மிக்க மைந்தர்கள் அடைய ஒரு மைந்தனை பலியிடவும் தயங்குவதில்லை. இதில் வரும் சசோமரின் கதை அத்தகையது .ஒரு ஆண் கருவுற்று குழந்தை பெற்றெடுப்பது போன்ற கதைகள் வித்தியாசமான அனுபவம்.. ஒவ்வொரு கல்வி நிலையாக சென்று வேதமும் கல்வியும் கற்கும் பாண்டவர்கள் இனி அவர்கள் செல்வதற்கு குரு நிலைகள் கல்விசாலை எக்காடுகளிலும் இல்லை என்ற நிலை வந்த பிறகு தருமன் இதுவரை கற்றவற்றை தொகுத்துக் கொண்டு தனக்குள்ளேயே விவாதித்துக் கொண்டும் எங்கும் நிறைந்திருக்கும் மகா பிரபஞ்சத்தின் பரமாத்மாவை கண்டுகொள்ளும் இறுதிக் கணங்கள் அற்புதமானவை. விண்ணகத்தின் பேராற்றல் , இளம் புலரியில் குருதி , தீ நடனத்தில் நின்றாடும் வெண்மை , நீரில் வண்ணமென ஒளியென ஆற்றலென வெளிப்படுவது , இளம் குறித்து களில் அனலாக , பசுவின் அகிடில் சுரக்கும் அமுதின் ஆற்றலாக, அனைத்து குருதிகளிலும் வெண்மையின் ஆற்றலாக, விதைகளில் உயிராக எங்கும் நிறைந்திருக்கும் பேராற்றலின் ஒளியை வணங்குவோம் ஓம் அவ்வாறே ஆகுக.
பண்டிகையைவிட, பண்டிகைக்கு காத்திருக்கும் காலமே அதிக குதூகலம். அதுபோலவே ஒரு பெரும் எதிர்பாரா துயர சம்பவத்தைவிட, அதன் பின் வரும் நாட்களே கடப்பதற்கு கடினமானவை. சூதாட்டமும், வஸ்திரபரணமும் முடிந்தபின் காடேகும் பாண்டவர்களின் மீளா அமைதியும், அதே அமைதியுடன் உள்ள வெவ்வேறு காடுகளும், அந்த அமைதியின் மூலமும் அந்த காடுகளின் மூலம் அவர்கள் தங்களை கண்டடைந்து ஆன்மாவை சமன்படுத்திக்கொள்வதே இங்கு களம். சாந்தீபனி, ஜெமோவின் பார்வையில் தான் எப்படி உருமாறுகிறது? அவன் இவ்வுலகை அழிப்பதற்கே வந்தவன், என்று ஆலிலையாளனை குறிப்பிடுவது உண்மையன்றோ!! யக்ஷ ப்ரச்சனத்தை தேடி கண்களும் காகிதங்களும் பரபரத்தால் இறுதியில் ஒரு மனோதத்துவ மருத்துவர் போல வரும் பக்கங்கள் காஷாயக் கடுமை. திரௌபதியும் கிருஷ்ணனும் சந்திக்கும் சிந்திக்கும் பக்கங்கள் பெரும்கல்வி. கிருஷ்ணன் திரௌபதியின் மீது வீசும் கேள்விகளும் அவளைமட்டுமா வாயடைத்து போக வைக்கின்றன? கந்த மதன காட்டுக்குப்பின் வருவது தருமனா? அனல் புடத்தில் இடப்படட அந்த காலனா? பஞ்ச பூதங்களும் மனித உருவினில் வந்து ஆடிய வேட்டையன்றோ பாரதம்
சொல்வளர்க்காடு மிகவும் பிடித்திருந்தது. பெரும்பாலும் மேடை மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில், இந்த வன பர்வத்தை அநியாயத்திற்கு நீக்கியோ அல்லது குன்றிய ஒன்றாக எடுத்துக்காட்டுவார்கள். ஆனால் ஜெமோ, படிப்படியாக காடுகளில் நம்மை அலைந்து திரியவிடுவதை வெகுவாக ரசித்தேன். மீதி வனபர்வ அனுபவங்களையும் விவரிப்பார் எனும் ஆர்வத்துடன் அடுத்தாண்டு அடுத்த புத்தகத்தை ஆரம்பிக்கப்போகிறேன்.