நவீன இந்திய இலக்கிய வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்திய வடிவமாகத் தலித் தன்வரலாற்று நூல்களைக் கூறலாம். விளிம்புநிலை வாழ்வு என்பதாக மட்டும் நின்றுவிடாமல் வரலாறு, புனைவு என்பவை குறித்த பார்வையையும் அவை விஸ்தரித்திருக்கின்றன. நீண்டகாலம் கழித்துத் தமிழ் தலித் தன்வரலாற்று வரிசையில் கச்சிதமான வருகையாக திருக்குமரனின் இந்நூல் அமைந்திருக்கிறது.
சாதியமைப்பில் பல்வேறு மாற்றங்கள் நடந்திருக்கும் சமகாலச் சூழலில் அதன் இருப்பு எத்தகைய வடிவங்களில் தங்கிக் கிடக்கிறது என்பதை 2000த்திற்குப் பிறகு வாழ நேர்ந்த தலித் இளைஞர் ஒருவரின் சுய அனுபவத்தின் வழியே நுட்பமாகக் காட்டுகிறது இந்நூல். தலித்துகள்மீது முன்புபோலச் சாதியை எளிதாகப் பிரயோகித்துவிட முடியாத அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் சாதி எவ்வாறு வெவ்வேறு வடிவங்களில் இயங்கத் தொடங்கியிருக்கிறது என்பதையும் இந்நூல் விரித்திருக்கிறது.
தஞ்சை வட்டாரப் பின்னணியிலிருந்து தலித் வாழ்வின் வலி மிகுந்த அனுபவங்களைச் சித்திரமாக்கியிருக்கிறது இந்தத் தன்வரலாறு. தலித் வாழ்க்கை என்றால் இழிவைச் சுமப்பது அல்லது கிண்டல் செய்து கடப்பது என்றிருந்த நிலையில் எதிர்ப்பை முன்வைக்கும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வது இந்நூலின் தனித்துவம். தலித் வாழ்வின் வலிகளை மட்டுமின்றிக் காதல், தோழமை முதலான வண்ணங்களையும் கொண்ட நூல் இது. Read less
இன்றைய காலகட்டத்தில் தீண்டாமையை ஒருவர் மீது அவ்வளவு எளிதாக வெளிப்படுத்த முடியாத சூழலில் அது எவ்வாறு அகம் புறம் சார்ந்து வெவ்வேறு வகைகளாக இயங்குகிறது என்பதை சுய அனுபவத்தின் மூலம் துல்லியமாக பதிவு செய்யும் நூல்.
It's a best work. இந்த புத்தகம் ரொம்ப நெருக்கமா, உணர்வுப் பூர்வமா, கவித்துமா இருந்தது. "கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்" chapter படிக்கும் போது எனக்கு வந்த கோவமும் அழுகையும் கலந்த உணர்ச்சி என்னால தாங்கிக்க முடியல. அந்த உணர்ச்சி பல இடங்கள்ல எனக்கு இந்த தன் வரலாற படிக்கும் போது வந்துச்சு, உடனே புத்தகத்த மூடிடுவேன் ஆனாலும் படிச்ச சொற்கள் evocative-ஆ அந்த சம்பவத்தோட காட்சியையும் உணர்வையும் மனசுல அழுத்தும். கு.கோவிந்தராஜன் chapter படிக்கும் போது goosebumps-ஆ இருந்துது. "ஆனந்த விகடனைக் கிழித்த அறை நண்பன்" chapter-ல ஒரு சாதிவெறியனுக்கு திருக்குமரன் குடுத்த reply-அ படிக்கும் போது பரமானந்தமா இருந்துச்சு. "இராண்டாம் ஏவாளின் சில குட்டிக் கவிதைகள்" chapter படிக்கும் போது ரொம்ப exhilarating-ஆ இருந்துச்சு. "பறக்கடவுள்" chapter இறுதில இருக்குற சுகிர்தராணி கவிதை படிகக்கும் போது ரொம்ப devastating-ஆ இருந்துது. திருக்குமரன் சந்திச்ச சாதி இழிவுகளை படிக்கும் போது பெரிய வேதனைய குடுத்தச்சு, ஆனா திருக்குமரன் அவரோட அறிவுக் கூர்மையால திருப்பி எதிர்த்து அடிக்கும் போது, எனக்குள்ள ஒரு பெரிய எழுச்சி உண்டாச்சு. இந்த தன் வரலாற படிச்ச பிறகு அவர் பெரிய மேல admiration-னும், அன்பும் உருவானுச்சு, அதே சமயத்துல பொறாமையாவும் இருக்கு, காரணம் அவருக்கு இருக்கும் பெரும்திரளான நண்பர்கள். வெளிபடையா எல்லாரோட பெயரையும் திருக்குமரன் குறிப்பிட்டது இந்த புத்தகத்த ரொம்பவே authenticate-ஆ ஆக்கியிருக்கு.