இதில் வரும் எல்லாக் கதைகளும், பெண்ணையும், அவளது பிரச்சனைகளையும் மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கின்றன. தற்கால சூழ்நிலையை அனுசரித்து, ஒரு குடும்பத்தின் ஏற்றமும் தாழ்வும், பெண்ணின் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. புராணக் கதைகள் இரண்டு கலந்திருக்கின்றன. எல்லாருக்கும் தெரிந்த கதைகள் என்றாலும், ஒரு கதையில், உலகம் போற்றும் உத்தமி அவளறியாமல் செய்த பிழையைச் சுட்டிக்காட்டுகிறது. மற்றொரு கதை, வறுமையின் சூழ்நிலையிலும், கணவனின் உயர்ந்த கொள்கைக்கு பங்கம் ஏற்படாமல் உறுதுணையாக நின்ற துணைவியின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.