“மாடு... மனை... கன்று... வீடு... வாகனம்... ஏவலர்... செல்வாக்கு... சொல்வாக்குன்னு எல்லாம் நிறைஞ்சிருக்கிற இந்த வீட்டில் விளக்கு ஏத்த மட்டும் யாருமில்லை... இந்தக் கொடுமையை ஏதாவது மலைகிட்டே சொல்லியிருந்தாலும் உருகிக் கரைஞ்சு ஓடியிருக்கும்...” பெருமூச்சில் பக்கத்தில் உட்கார்ந்து தினசரி படித்துக் கொண்டிருந்த பிரபுவுக்கு பறப்பது போலிருந்தது. “மின் விளக்கு ஸ்விட்சை யார் போட்டாலும் எரியுமே... வளையல் போட்ட கை... வாட்ச் கட்டின ஆண் கைன்னு வித்தியாசம் எதுவும் அதுக்கு தெரியாதுன்னுதான் இந்த விநாடி வரை நம்பிக்கிட்டிருக்கேன்...” “டேய்... டேய்... காலையில் என்கிட்டே வம்பு வெச்சுக்காதே... சொல்லிட்டேன்... நான் பைத்தியக்காரன்... ஏதோ புலம்பிக்கிட்டிருக்கேன்...