நெஞ்சுக்குள் பெரும் புழுக்கம். அந்த அரைவட்ட நிலப்பரப்பின் அடுத்த முனைக்குச் சென்று அவளுக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றான். தன் வெளிச்சத்தைக் கடலுக்குள் பாய்ச்சியபடி சூரியன் கரையொதுங்கிக்கொண்டிருந்தது.
ஆழிப்பேரலைக்குள் அகப்பட்டுவிட்ட படகினைப்போன்று கிருபனின் மனம் அமைதியிழந்து அலைபாய்ந்தது. அவள் கேட்கிற கேள்விகளுக்கு உண்மையைச் சொல்வது என்றால் அவன் தன் மனதைச் சொல்ல வேண்டும். அங்கே, அவள் தன் அன்னையின் இடத்தைப் பிடித்திருப்பத்தைச் சொல்ல வேண்டும். என்ன செய்யப் போகிறான்?
அரவிந்தன் கண் முன்னே வந்து போனான். சுகுணாவும் பரந்தாமனும் கனிவுடன் அவனை நோக்கிப் புன்னகைத்தனர். விழிகளை இறுக்கி மூடித்திறந்தான். மன்னிப்பைக் கேட்டு மனதை மறைத்து