ஸந்த்யாவந்தநம் என்பது முப்புரிநூல் அணிந்த அனைவரும் மூன்று காலங்களிலும் செய்ய வேண்டிய நித்ய கர்மமாகும். மூன்று காலங்கள் என்பன விடியற்காலையில் ஸூர்ய உதயத்திற்கு முன்பும் (ப்ராதஸ்ஸந்த்யாவந்த3நம்), நடுப்பகலும் (மாத்யாஹ்நிகம்), சாயங்காலத்தில் ஸூர்ய அஸ்தமனத்திற்கு முன்பும் (ஸாயம் ஸந்த்யாவந்தநம்) ஆன காலங்கள். "காணாது, கோணாது, கண்டு" என்பது பொதுவான வழக்கு. இந்தப் புத்தகத்தில் தென்னாசார்ய க்ரமத்தை அநுசரித்த யஜுர் வேத ஸ்ரீவைஷ்ணவ ஸந்த்யாவந்தநம் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தக் க்ரமத்தில் சில இடங்களில் சிஷ்டாசாரத்தை ஒட்டி வேறுபாடுகள் உள்ளதால், இந்நூலில் உள்ள க்ரமம் பொதுவான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதை பயன்படுத்துமவர்கள், தங்கள் பெரியோர்களĬ