வாடாமல்லி. மறக்க முடியாமல் மனசெங்கெம் உறைந்து கிடக்கிற வலிகளின் தொகுப்பு. படிக் கையில் நம்மையும் நம் உறவுகளையும் கண்முன்னே கொண்டு வந்த நிறுத்தி திரும்பத்திரும்ப பார்க்க வைப்பவை. நினைவுகளில் ஆழ்த்த செய்பவை. நடுநாட்டு மனிதர்களின் விரிந்த வாழ்வைச் சொல்லும் கனத்தக் கதைகள்.
From Wiki: கண்மணி குணசேகரன் (பிறப்பு: 1971) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.