வீட்டில் எந்தக் காயும் நிறைய இல்லாமல், கொஞ்சம் கொஞ்சம் எல்லாக் காயும் இருந்தால் அவியல் செய்வார்கள். சில நேரங்களில் அவியலின் சுவை அபாரமாய் இருக்கும். இந்தத் தொகுப்பும் அவியல் மாதிரி. பல்வேறு சுவைகள்.
ஆரம்ப காலங்களில் நான் எழுதிய கதைகள். அந்தக் கதைகளை இப்போது படிக்கும்போது - அந்த நாட்களில் வீடு, அலுவலகம், சின்னக் குழந்தை என்று நான் ஓடிய ஓட்டத்தை இப்போது காண முடிகிறது. இப்போதும் அந்த ஓட்டம் தொடர்கிறது என்றாலும், காலம் சில விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுத்து அமைதிப்படுத்தி விடுகிறது அல்லவா... அந்த அமைதியோடு கதைகளை மறுவாசிப்பு செய்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.