Jump to ratings and reviews
Rate this book

Arumugam

Rate this book
NA

235 pages, Paperback

First published January 1, 1999

10 people are currently reading
63 people want to read

About the author

Imaiyam

21 books93 followers
இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (20%)
4 stars
8 (26%)
3 stars
13 (43%)
2 stars
1 (3%)
1 star
2 (6%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Muthu Vijayan.
37 reviews14 followers
January 18, 2022
இது நான் வாசிக்கும் இமையத்தின் ஐந்தாவுது புத்தகம் - ஆறுமுகம்.

கதை எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிகிறது. இதே போல் தான் ஆறுமுகத்திற்கும் அவன் சந்திக்கும் மனிதர்களுக்கும், சிலருக்கு இன்னும் தொடரும் ஆறுமுகத்தை போல. உழைப்பு சுரண்டல், பாலியல் வன்முறைகள் என நாவல் விரிகிறது.

அவர்கள் வீட்டு சிம்னி விளக்கின் முன் அவர்களுடனே அமர்ந்திருப்பது போல, அவர்களுடன் ரிக்ஷாவில் பயணம் செய்வது போல, அவர்களுடனே கூலி வேலைக்கு, சமையல் வேலைக்குச் செல்வதை போல அந்த சூழலுடன் நாமும் பயணிப்போம்.

இமையத்தின் எழுத்துலகமே அப்படித்தான். நான் இமயத்தை தொடர்ந்து வாசிப்பதற்கான காரணம் அவரின் எழுத்து நடையும் கூட ( 'எங் கதெ' நாவல் )

அந்த வட்டார மக்களின் பேச்சு வழக்கிலே நாவல் நகர்கிறது. சிரமமின்றி கதாபாத்திரங்களின் மனதில் நுழைந்து அவர்களின் எண்ணங்களை அழகாக கொண்டு வருகிறார். இந்த உயிர்களை அவர் அறிந்ததால்தான் இது சாத்தியம் என்று நினைக்கிறேன்.

இமையத்தின் "செல்லாத பணம்"மும்
இதே போல் தான் அனுபவத்தின் முழுமையினாலே அப்படி ஒரு நாவலை எழுத முடியும்.

சமூகத்தின் அவலம் - இமையத்தின் எழுத்து.
108 reviews3 followers
June 18, 2023
புத்தகம்: ஆறுமுகம் எழுத்தாளர்: இமயம்
பிரசுரம்: க்ரியா

ஆறுமுகத்தை பத்தி பேசணும் என்றால் அவனை சுற்றியுள்ள எல்லாமே தான் அவன். ஆறுமுகம் நாவல் முழுக்க விரைவு இருக்கிறது மனுஷங்களோட வாழ்வு, எளிய விளிம்பு நிலை வாழ்வு. செத்த தூக்கி பொட அல்ல வேணும் என்கிற வாழ்வு‌. விபச்சாரம் சார்ந்த பின்னி கெண்ட நாவல்கள் இப்படி தான் என்று வெளிச்சம் போட்டு காட்டும்‌. இங்க வெறும் அசை பட்டு இங்க வரல. அன்றாட பிழைப்பு எப்படி எல்லாம் சீப்பாத்து இருக்கு. அதை எப்படி கூட இந்த ஒரு வாழ்வியலை சொல்லிட முடியும் என்று ஆறுமுகம் வாயிலாக இமயம் காண்பித்துள்ளார். தனபாக்கியம், தாத்தா, சின்ன பொண்ணு வசந்தா, ராமன் குப்புசாமி, பாக்கியம், ஜிப்மர் மருத்துவமனை, பாண்டிச்சேரி மேச்சேரி அப்படியே அந்த வாழ்க்கையோடு ஒன்றி ஒரு வலியை தருகிறது.
இமயத்தோட எந்த பக்கமே சோட போகாது. மூன்று நாவல்கள் வாசித்து உள்ளேன் மூன்றுமே மிக மிக அற்புதமான காவியங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
கண்ணீர், சாதி அடக்குமுறை, உறவுகள் தரும் வலி.
அம்மண்ணில் உள்ள வலிகளை, அம்மண்ணின் மொழியிலேயே நம்மை கலங்க செய்கிறது.

புத்தகத்திலிருந்து பிடித்த வரிகள்:

நேத்துங்கறது பொணம். பொணத்த யாரும் ஊட்டிலியே வச்சிக்க ஆசப்படுறதில்ல, எல்லாத்தயும் அடியோட கயிச்சுக்கட்டு.ஈவத்துக்கட்டு. பொணத்துமேல மண்ணத் தள்ளி முடுறாப்ல நேற்றுங்கற எல்லாத்துமேலயும் காறித் துப்பிட்டு மூடு.

என்னோட மொகத்த நான் யாரோட மொகத்துல போய்ப் பாப்பன்.

ஒருத்தன வெசத்த வச்சிதான் கொல்லணுமின்னு இல்ல, வெல்லத்த வச்சே கூட கொன்னுபுடலாம்.

யாருக்குத்தான் யாரு யாரா வேணும்?

எப்படி கூப்பிட்டா என்னா? தொண்டை சத்தத்துல என்னா இருக்கு?

பொட்டச்சிக்கு எதுக்குடா சாதி? கொலம் கோத்தரமெல்லாம் எதுக்குடா? பொட்டச்சிக்கிட்டே இருக்கிற தொட சந்துக்காதாண்டா எல்லாச் சாதிக்காரனும் வச்சிக்கிட்டு இருக்கானுவோ?
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews19 followers
January 24, 2020
தனபாக்கியம் புருசன் ராமன் கண்ணாலமான சில வருசத்துலயே செத்துட்டான், இவங்க மவன் ஆறுமுகம். உடல் பசித்த தனபாக்கியம் ஒருத்தனோட உறவுலயிருக்கிறப்ப சின்ன பையன் ஆறுமுகம் அத பாத்துப்போட்டு தனபாக்கியத்தை வெறுத்து ஓட்டாம ஓடுறான். அவன் ஓட்டம் அவன எங்க எப்புடி கொண்டுபோனதுங்கிறதுதான் இந்த கதெ.

ஆறுமுகம் சந்தித்த செக்குமேடு சின்னப்பொண்ணு, ரிக்சா தருமமூர்த்தி, வசந்தா, கறிக்கடை பாக்கியம், சமையல்கார குப்புசாமி ஏதோ ஒரு சோகத்தை நமக்குள் ஏற்றிவிட்டுவிடுகிறார்கள்.

-கலைச்செல்வன் செல்வராஜ்
53 reviews8 followers
October 31, 2024
#13thbook #3rdMay2024 #MadhureadingChallenge2024

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளரும் சிறுவன் ஆறுமுகம் எதிர்பாரா நேரத்தில் எதிர்கொள்ளும் சம்பவத்தால் அவன் வாழ்வு இப்படி திசை மாறுகிறது என்பதே இந்த நாவல்.

இளம்வயதிலேயே தனது கணவனை இழந்த தனபாக்கியம், தன்னுடைய ஒரே மகனின் எதிர்காலம் மற்றும் படிப்பினை கருத்தில் கொண்டு தன் கிராமத்தை விட்டு பாண்டிச்சேரியில் இடம்பெயர்கிறாள். அங்கு தன் தாய் ஒரு ஆங்கிலேய ஒருவனுடன் படுத்திருப்பதை கண்ட ஆறுமுகம் அதனை ஜீரணிக்க முடியாமல் வீட்டை விட்டு ஓடி விடுகிறான். அங்கு இருந்து ஆறுமுகம் சமுதாயத்தின் இன்னொரு முகத்தை பார்க்க ஆரம்பிக்கிறான். அதன் பிறகு அவன் அடுத்தடுத்த சந்தித்த மனிதர்கள், அவர்களால் அவள் வாழ்வில் கண்ட தாக்கங்கள், இறுதியில் அவன் தனபாக்கியத்தை சந்தித்தானா என்பதே நாவல்.

வாழ்க்கை என்றால் என்ன என்று ஆறுமுகம் செக்குமேட்டிலும் அங்கு தான் சந்திக்கும் வசந்தா, சின்னப்பொண்ணு, அபிதா, பாக்கியம் மற்றும் லட்சுமி போன்ற பெண்களின் வாயிலாக தெரிந்துக் கொள்கிறான். எப்போதும் இமையம் அய்யா அவர்களின் கதைகளில் உள்ளது போல் இதிலும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை பதிவு செய்துள்ளார். இந்நாவலில் பாண்டிச்சேரி செக்குமேட்டில் வாழும் பாலியல் தொழில் செய்யும் பெண்களின் வாழ்வு முறை பொருளாதாரம், அன்றாட அவலங்களை ஆழமாக பதிவு செய்துள்ளார். நாவலில் வரும் ஒவ்வொரு மாந்தர்களின் வலியை வாசிப்பின் வழியே நாமும் உணர்ந்து கொள்ள முடிவது தான் இந்த நாவலில் வெற்றி.
Profile Image for Bhuvan.
254 reviews42 followers
May 26, 2024
3.5 - ஆறுமுகம்.

தந்தையை இழந்து,
தான் என்ன இழந்தோம் என்பதை தெரியாமல், விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் ஆறுமுகத்திடமிருந்து கதை தொடங்குகிறது.

ஆறுமுகம் வாழ்வில் அடுத்து என்னென்ன நடந்தன அவனை காலம் எங்கே கூட்டி சென்றது என்பதே இந்த நாவல்.

ஆறுமுகத்தை தவிர இந்த கதையில் வரும் பெரும்பாலானோர் பெண்கள் தான்.

அவர்களின் அழுகுரலும் அவர்களின் புலம்பல்களும் அவர்களின் வசைகளும் எல்லா பக்கங்களிலும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

பலதரப்பட்ட பெண்கள் அவர்களின் வாழ்க்கை சோகங்கள் அவர்களின் நியாயங்கள் அவர்களின் ஆசைகள் என்று பெண்களின் உலகிற்குள் நாவல் நீண்டு கொண்டே செல்கிறது.

கதை முடியும் தருவாயில் மனம் கணக்க வைக்கிறது.
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.