புயல் எப்போது கரையை கடக்கும் என்று வைசாலி அப்பார்ட்மெண்டில் இருந்த குடும்பங்கள் மாடியில் பேசிக் கொண்டிருந்தார்கள். அஞ்சனாவோ, அவள் மேல் விழும் மழைத்துளிகளில் எந்த துளி அவனைத் தொட்டத் துளிகள் என்ற ஆராய்ச்சியில் இருந்தாள். வானில் மின்னல் வெட்டியது. அதைத் திரும்பிப் பார்த்த பிரதாப்பின் பார்வையில், மின்னல் கீற்றை பின்னணியாகக் கொண்ட அஞ்சனா தெரிந்தால். அவன் பார்வையில் மின்னலடித்தது.