பொன்னியின் செல்வன் பேரவை (Ponniyin Selvan Peravai) discussion
This topic is about
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
Articles
>
Articles about Ponniyin Selvan
date
newest »
newest »
message 1:
by
Rajasekar, கல்கி தாசன்
(new)
-
rated it 5 stars
Aug 21, 2013 11:39PM
Mod
reply
|
flag
பழையாறை
Pazhayarai – Somanatha Swamy Temple>

காமதேனுவின் மகளாகிய பட்டியால் பூசிக்கப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது. பட்டீச்சரம் என்பது கோயிலின் பெயர். தலத்தின் பெயர் பழையாறை என்பது. அது பெரிய நகரமாய் இருந்த இடம். சோழ அரசர்கள் முடி சூடும் ஐந்து நகரங்களில் ஒன்று. இப்பொழுது அது பல ஊர்களாகப் பிரிந்து வழங்குகிறது. பட்டீச்சரம் என்னும் கோயில் இருக்கும் ஊர் முன்பு (திருஞானசம்பந்தர் காலத்தில்) மழபாடி (கொள்ளிடத்தின் வடபால் மழநாட்டைச் சேர்ந்த திருமழபாடி என்பது வேறு தலம்.) என்று வழங்கப்பெற்றது. இப்பொழுது அவ்வூரும் பட்டீச்சரம் என்றே வழங்கப்பெறுகின்றது. திருஞானசம்பந்தப்பெருமான் அதை மழபாடி நகரம் என்றே பாடியுள்ளனர்.
இருப்பிடம்
இது கும்பகோணம் - தஞ்சாவூர் இருப்புப்பாதையில் இருக்கும் தாராசுரம் தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே சுமார் 3. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரிக்குத் தென்கரையில் உள்ள தலங்களுள் இருபத்துமூன்றாவது ஆகும்.
சிறப்புக்கள்.
சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம். பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் "சோழமாளிகை" என்னும் தனி ஊராக உள்ளது.
தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கின. இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் - பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் - முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றது.
பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும் - 1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன அந்நான்காகும். சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணாநோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் தலம்.
இங்குள்ள (சோம தீர்த்தம்) தீர்த்தக் குளத்துநீர் சித்தபிரமை முதலியவைகளைப் போக்கவல்லது என்று நம்பப்படுகிறது. இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது. குந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள்.
Pazhayarai – Somanatha Swamy Temple>

காமதேனுவின் மகளாகிய பட்டியால் பூசிக்கப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது. பட்டீச்சரம் என்பது கோயிலின் பெயர். தலத்தின் பெயர் பழையாறை என்பது. அது பெரிய நகரமாய் இருந்த இடம். சோழ அரசர்கள் முடி சூடும் ஐந்து நகரங்களில் ஒன்று. இப்பொழுது அது பல ஊர்களாகப் பிரிந்து வழங்குகிறது. பட்டீச்சரம் என்னும் கோயில் இருக்கும் ஊர் முன்பு (திருஞானசம்பந்தர் காலத்தில்) மழபாடி (கொள்ளிடத்தின் வடபால் மழநாட்டைச் சேர்ந்த திருமழபாடி என்பது வேறு தலம்.) என்று வழங்கப்பெற்றது. இப்பொழுது அவ்வூரும் பட்டீச்சரம் என்றே வழங்கப்பெறுகின்றது. திருஞானசம்பந்தப்பெருமான் அதை மழபாடி நகரம் என்றே பாடியுள்ளனர்.
இருப்பிடம்
இது கும்பகோணம் - தஞ்சாவூர் இருப்புப்பாதையில் இருக்கும் தாராசுரம் தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே சுமார் 3. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரிக்குத் தென்கரையில் உள்ள தலங்களுள் இருபத்துமூன்றாவது ஆகும்.
சிறப்புக்கள்.
சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம். பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் "சோழமாளிகை" என்னும் தனி ஊராக உள்ளது.
தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கின. இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் - பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் - முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றது.
பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும் - 1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன அந்நான்காகும். சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணாநோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் தலம்.
இங்குள்ள (சோம தீர்த்தம்) தீர்த்தக் குளத்துநீர் சித்தபிரமை முதலியவைகளைப் போக்கவல்லது என்று நம்பப்படுகிறது. இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது. குந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள்.

