அண்ணாமலை ரங்கநாதன் > அண்ணாமலை's Quotes

Showing 1-1 of 1
sort by

  • #1
    Subramaniya Bharathiyar
    “திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
    தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
    பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
    பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
    தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
    சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
    தக்கை யடிக்குது காற்று-தக்கத்
    தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

    வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
    வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
    கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
    கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
    சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
    தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
    எட்டுத் திசையும் இடிய-மழை
    எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!

    அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
    ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
    மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
    வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
    செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
    தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
    கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
    காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal



Rss
All Quotes



Tags From அண்ணாமலை’s Quotes