Sooryaprakash > Sooryaprakash 's Quotes

Showing 1-4 of 4
sort by

  • #1
    Subramaniya Bharathiyar
    “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #2
    Subramaniya Bharathiyar
    “ஓடி விளையாடு பாப்பா!-நீ
    ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
    கூடி விளையாடு பாப்பா!-ஒரு
    குழந்தையை வையாதே பாப்பா!

    சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
    திரிந்து பறந்துவா பாப்பா!
    வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
    மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

    கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
    கூட்டி விளையாடு பாப்பா!
    எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
    இரக்கப் படவேணும் பாப்பா!

    பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
    பசுமிக நல்லதடி பாப்பா!
    வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
    மனிதர்க்கு தோழனடி பாப்பா!

    வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
    வயலில் உழுதுவரும் மாடு,
    அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
    ஆதரிக்க வேணுமடி பாப்பா!

    காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
    கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
    மாலை முழுதும் விளையாட்டு-என்று
    வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

    பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
    புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
    தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
    தீங்குவர மாட்டாது பாப்பா!

    பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
    பயங்கொள்ள லாகாது பாப்பா!
    மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
    முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

    துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
    சோர்ந்துவிட லாகாது பாப்பா!
    அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
    அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

    சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
    சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
    தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
    திடங்கொண்டு போராடு பாப்பா!

    தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
    தாயென்று கும்பிடடி பாப்பா!
    அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
    ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

    சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
    தொழுது படித்திடடி பாப்பா!
    செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
    தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

    வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
    வாழும் குமரிமுனை பாப்பா!
    கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
    கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!

    வேத முடையதிந்த நாடு,-நல்ல
    வீரர் பிறந்ததிந்த நாடு;
    சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
    தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

    சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
    நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
    நிறை உடையவர்கள் மேலோர்.

    உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
    உண்மையென்று தானறிதல் வேணும்;
    வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
    வாழும் முறைமையடி பாப்பா!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #3
    Subramaniya Bharathiyar
    “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
    பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
    போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
    நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
    ஞான நல்லறம் வீர சுதந்திரம்
    பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
    பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #4
    Vivekananda
    “Take up one idea. Make that one idea your life; dream of it; think of it; live on that idea. Let the brain, the body, muscles, nerves, every part of your body be full of that idea, and just leave every other idea alone. This is the way to success, and this is the way great spiritual giants are produced.”
    Swami Vivekananda, Vedanta Philosophy: Lectures by the Swami Vivekananda on Raja Yoga Also Pantanjali's Yoga Aphorisms, with Commentaries, and Glossary of Sanskrit Terms



Rss