Mythili Venkat > Mythili's Quotes

Showing 1-3 of 3
sort by

  • #1
    Subramaniya Bharathiyar
    “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #2
    Subramaniya Bharathiyar
    “காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்
    கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!
    பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்
    பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!
    கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்
    கீத மிசக்குதடா நந்த லாலா!
    தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
    தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!”
    Subramaniya Bharathiyar, பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal]

  • #3
    Subramaniya Bharathiyar
    “சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
    வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
    பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
    நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal



Rss