Senthilkumar K > Senthilkumar's Quotes

Showing 1-4 of 4
sort by

  • #1
    Subramaniya Bharathiyar
    “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #2
    Subramaniya Bharathiyar
    “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
    வெந்து தணிந்தது காடு;-தழல்
    வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
    தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #3
    Subramaniya Bharathiyar
    “காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்
    கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!
    பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்
    பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!
    கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்
    கீத மிசக்குதடா நந்த லாலா!
    தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
    தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!”
    Subramaniya Bharathiyar, பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal]

  • #4
    Subramaniya Bharathiyar
    “தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்
    செண்பகத் தோட்டத்திலே,
    பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
    பாங்கியோ டென்று சொன்னாய்
    வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!
    மார்பு துடிக்கு தடீ!
    பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே
    பாவை தெரியு தடி!

    மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே
    வேதனை செய்கு தடீ!
    வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா
    வந்து தழுவுது பார்!
    மோனத் திருக்குதடீ! இந்த வையகம்
    மூழ்கித் துயிலினிலே,
    நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர்
    நரகத் துழலுவதோ?

    கடுமை யுடைய தடீ!எந்த நேரமும்
    காவலுன் மாளிகையில்;
    அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான்
    அங்கு வருதற் கில்லை;
    கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும்
    கூடிக் கிடக்கு தங்கே;
    நடுமை யரசி யவள்-எதற் காகவோ
    நாணிக் குலைந்திடுவாள்.

    கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம்
    கொஞ்சிக் குலவி யங்கே
    ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை
    ஆயிரங் கோடி முறை
    நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான்
    நல்ல களி யெய்தியே
    பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்
    பண்ணிய தில்லை யடி!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal



Rss